நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 April, 2023 2:56 PM IST
Purchase of 6.7 tons of copra in four weeks in Madurai!

வாடிப்பட்டி மற்றும் மேலூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை நிலையங்கள் மூலம் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

விலை ஆதரவு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டுக்கான கொப்பரை கொள்முதல் பணியை வேளாண் துறை தொடங்கியுள்ளது. ஐந்து விவசாயிகளிடம் இருந்து இதுவரை சுமார் 6 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது, இருப்பினும், பேக்கிங் பைகள் இல்லாததால், கொள்முதல் செயல்முறை சற்று தாமதமானது. 100 மெட்ரிக் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாடிப்பட்டி மற்றும் மேலூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை நிலையங்கள் மூலம் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின்படி, கொள்முதல் செய்யப்படும் கொப்பரைக்கு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவிண்டாலுக்கு ரூ.10,860 வழங்க வேண்டும். தேவையான கொள்முதல் தரத்தின்படி, கொப்பரையின் ஈரப்பதம் 6 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். கொள்முதல் செய்யப்படும் கொப்பரைக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

இதுகுறித்து துறையின் சந்தைப்படுத்தல் குழு செயலாளர் வி மெர்சி ஜெயராணி கூறியதாவது: கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் ஜூலை வரை மதுரையில் 16.9 மெட்ரிக் டன் (வாடிப்பட்டி ஆர்.எம்.மில் இருந்து 9.7 மெட்ரிக் டன், மேலூர் ஆர்.எம்.மில் இருந்து 7.2 மெட்ரிக் டன்) கொள்முதல் செய்யப்பட்டது. "இந்த ஆண்டு, நான்கு வாரங்களில் 6 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் தரத்தின்படி கொப்பரை எப்படி உற்பத்தி செய்வது என்பது குறித்து துறை விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது," என்று அவர் கூறியுள்ளார்.

வழக்கமான ஏலத்தின் போது, கொப்பரை சராசரியாக கிலோ ஒன்றுக்கு ரூ.50 முதல் ரூ.70 வரை கிடைக்கும் என்றும், அதேசமயம், பிஎஸ்எஸ்-ன் கீழ் கொள்முதல் செய்யும் போது விலை அதிகமாக இருக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க

காரைக்காலில் முதல் முறையாக 2 ஏக்கரில் தினை சாகுபடி!

தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம்! வறட்சியில் அல்லிகுளம் கிராமம்!!

English Summary: Purchase of 6.7 tons of copra in four weeks in Madurai!
Published on: 27 April 2023, 02:56 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now