மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 June, 2020 7:47 PM IST

தென்மேற்கு பருவாற்று மற்றும் வெப்பச்சலனம் காரனமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவகாற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குள் தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் லேசான மழையும், அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், நீலகிரி,கோவை,தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

  • மத்திய கிழக்கு வங்ககடல் பகுதியில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக ஜூன் 9 முதல் 11 வரை மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திரா கடலோர பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் வீசும்.
  • ஜூன் 9 முதல் ஜூன் 13 வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசும்.
  • ஜூன் 11 மற்றும் ஜூன் 12 லட்சத்தீவு, கேரளா மற்றும் கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் வீசும்.
  • ஜூன் 13 கேரளா மற்றும் கர்நாடக கடலோரப்பகுதி சூறாவளி காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் வீசும்.
  • இந்த சமயங்களில் குளச்சல் கடல் பகுதி முதல் தனுஷ்கோடி வரை ஒருசில நேரங்களில் கடல் அலை 3.0 முதல் 3.4 மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும் இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாமென சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க...

தஞ்சை காவிரி டெல்டா பகுதி குடிமராமத்து பணியில் 1 லட்சம் பணியாளர்கள்

தீவிரமாகும் பருவமழை - அணைகள் திறப்பு - சாகுபடி பணிகள் மும்முரம்

English Summary: rain alert for tamilnadu says chennai meteorological department
Published on: 09 June 2020, 07:47 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now