மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 October, 2021 11:07 PM IST
Credit: Business league

தீபாவளியை முன்னிட்டு நுகர்வோரின் வசதியைக் கருத்தில்கொண்டு, ரேஷன் கடைகளின் திறப்பு நேரத்தை அதிகரித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் பொருட்கள் (Ration items)

பொதுவாக பண்டிகைக் காலங்களில் சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை நுகர்வோரின் வசதிக்கு ஏற்ப வழங்கி உதவ வேண்டும் என உணவுப் பொருள் வழங்கல்துறை திட்டமிடுவது வழக்கம்.

இது தொடர்பாக தமிழக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உதவி ஆணையர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த 11-ந் தேதி உணவுத்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் பயனடையும் வகையில் நவம்பர் மாதத்திற்கான சிறப்பு அத்தியாவசியப் பொருட்களைக் கடைகளுக்குக் கொண்டு வருவதை முழுமையாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தீபாவளி (Deepavali)

மேலும், நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகை வருவதால், அம்மாதத்தின் 1, 2 மற்றும் 3-ந் தேதிகளில் ரேஷன் கடைகள் காலை 8 மணியில் இருந்து மாலை 7 மணி வரைத் திறக்கப்பட வேண்டும் என்று அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, நவம்பர் மாதத்திற்கான சிறப்பு அத்தியாவசிய பொருட்களின் அதிகபட்சமான முன்நகர்வு முழுமையாக முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்படுகிறது.

காலை 8 முதல் மாலை 7 மணி வரை (8 a.m. to 7 p.m.)

மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1, 2 மற்றும் 3-ந் தேதிகளில் ரேஷன் கடைகள் காலை 8 மணியில் இருந்து மாலை 7 மணி வரை திறக்கப்பட்டு, அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

ரேஷன் கார்டு யோஜனா: PMGKY மூலம் மக்களுக்கு இலவச ரேஷன்!

Ration card: புதிய ரேசன் கார்டுகள்?விரைவில்!

English Summary: Ration shops increase opening hours - Diwali organized!
Published on: 16 October 2021, 10:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now