மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 June, 2021 7:25 AM IST
Credit : Dailythanthi

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வந்தாலும், அதனை எதிர்கொள்ள அரசிடம் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதி அளித்துள்ளார்.

கொரோனா 2-வது அலை (Corona 2nd wave)

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தொற்று அதிகமாக இருந்த நிலையில் புதிதாகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் அதிரடி நடவடிக்கைகளால், தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 35 ஆயிரத்தைக் கடந்த தினசரி கொரோனா பாதிப்பு படிப்படியாக 7 ஆயிரம் வரைக் குறைந்துள்ளது.

இந்த நிலையில், புதிய சட்டசபையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்று வருகிறது.

விஜயபாஸ்கர் கருத்து (Vijayabaskar comment)

இந்தக் கூட்டத் தொடரின், 2 வது நாளான இன்று பேசிய அதிமுக எம்.எல்.ஏ. விஜயபாஸ்கர், ஆளுநர் உரையில் கொரோனா பெருந்தொற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதை முக்கியமாக பார்க்கிறேன்.

அதிமுக எதிரிக்கட்சியாக இல்லாமல், எதிர்க்கட்சியாக செயல்படும். பொது போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில் அரசு இன்னும் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

முதல்வரின் நடவடிக்கை (The action of the CM)

தமிழ்நாட்டில் கொரோனாத் தொற்று தொடர்ந்து குறைந்து வருவதற்கு முதலமைச்சரின் நடவடிக்கையே காரணம். கொரோனா தடுப்பூசி முழுமையாக போடப்பட்ட மாநிலமாகத் தமிழ்நாடு மாறும்.

7 லட்சம் தடுப்பூசிகள் (7 lakh vaccines)

தடுப்பூசி போடுவதை தமிழ்நாடு அரசு, மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பு இருந்தால் நாளொன்றுக்கு 7 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இயலும்.

3-வது அலைக்கு தயார் (Ready for the 3rd wave)

எனவே 3-வது அலை வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தமிழக அரசுத் தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசக் கொரோனாத் தடுப்பூசி - தமிழக அரசு!

கொரோனா தடுப்பூசி விநியோகிக்க டிரோன் பயன்பாடு! ஆய்வு செய்ய அரசு அனுமதி!

தமிழகத்திற்கு 4 இலட்சம் கொரோனா தடுப்பூசி வருகை! சுகாதாரத் துறைத் தகவல்!

English Summary: Ready to face the 3rd wave - Minister Ma Subramaniam assured!
Published on: 22 June 2021, 09:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now