நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 September, 2022 11:27 AM IST
Rice price hike in Tamil Nadu

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இன்று அரிசியின் விலை உயந்துள்ளது. நெல்தட்டுப்பாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி போன்றவற்றால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு விளக்குகிறது.

தமிழகத்தில் குறைவாக நெல் சாகுபடி செய்யப்பட்டது, நெல் கொள்முதல் விலை உயர்வு மற்றும் வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி முதலான செயல்பாடுகளால் அரசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை அங்காடியில் இருக்கும் அனைத்து வகையான அரிசியின் விலையில் ஏற்றம் கண்டது. 26 கிலோ கொண்ட ஒரு மூட்டை அரிசியின் விலை ஒரு மாதத்தில் சுமார் 150 முதல் 300 வரை ஏற்றமடைந்துள்ளது.

அரிசியின் விலைநிலவரம்

  • ரூ. 900 விற்ற பொன்னி அரிசி ரூ. 1200-க்கு விற்பனையாகிறது.
  • ரூ. 980 விற்ற புல்லட் அரிசி ரூ. 1200-க்கு விற்பனையாகிறது.
  • ரூ. 1050 விற்ற பொன்னி பச்சை அரிசி ரூ. 1250-க்கு விற்பனையாகிறது.
  • ரூ. 690 விற்ற இட்லி அரிசி ரூ. 850-க்கு விற்பனையாகிறது.
  • ரூ. 2200 விற்ற பாசுமதி அரிசி ரூ. 2500-க்கு விற்பனையாகிறது.

தமிழகத்தில் நெல் உற்பத்தி குறைந்து வருவதாலும், அதே சமயத்தில் வெளிநாடுகளுக்கு தமிழக அரிசி வகைகள் ஏற்றுமதியின் அளவு அதிகரித்து வருவதாலும் விலை அதிகரித்துள்ளது எனக் கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர். மேலும், அவர்கள் குறிப்பிடுகையில், உடனடியாக மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். இதே நிலை நீடித்தால் தமிழகம் மற்றும் சென்னையில் அரிசியின் விலை தொடர்ந்து உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

உணவிற்கு என 1 கிலோ முதல் 5 கிலோ வரை அரிசி அன்றாடம் வாங்கி சமைக்கும் ஏழை எளிய மக்கள் பெரியளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க

பார்வை இழப்பை ஏற்படுத்தும் உணவுகள்: அதிர்ச்சித் தகவல்!

மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்-இன் 70 ஆண்டு கால ஆட்சி!

English Summary: Rice price hike in Tamil Nadu: People are shocked!
Published on: 09 September 2022, 11:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now