தமிழக அரசு, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவியர் உயர் கல்வியில் சேருவதை ஊக்கப்படுத்த, மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அந்த நிதியை, கூட்டுறவு வங்கிகள் வாயிலாக வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
உதவித் தொகை (Scholarship)
கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ள ரூபாய் 1,000 உதவித்தொகைக்கான பதிவை வரும் ஜூலை மாதம் 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: கல்லூரி மாணவிகளுக்கு ரூபாய் 1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில், இது வரை 3.58 இலட்சம் மாணவிகள் விண்ணபித்து உள்ளனர்.
இதற்கான கடைசி தேதி கடந்த ஜூலை மாதம் 10 ஆம் தேதி வரை என கூறப்பட்டது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வரும் ஜூலை மாதம் 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரைபயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும். இதனால், இதுவரையிலும் விண்ணப்பிக்காத மாணவிகள், விரைந்து விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் படிக்க
கூட்டுறவு வங்கி வழியாக மாணவியருக்கு ரூ.1,000 உதவித்தொகை!
வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை: விரைந்து விண்ணப்பிக்கவும்!