News

Saturday, 10 July 2021 04:28 PM , by: T. Vigneshwaran

CM Stalin,Tamil Nadu

தமிழக முதலமைசசர் மு.க ஸ்டாலின் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு ரூ.472 கோடி நன்கொடை கிடைத்திருப்பது அவர் மீதான நம்பிக்கையை காட்டுவதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டரில் தெறிவித்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், CMPRF இணையதளம் எளிதாக்கப்பட்டு,வரவு செலவு விவரங்கள் வெளிப்படையாக அறிந்துகொள்ள புதுப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் 14 மாத அதிமுக ஆட்சியில் ரூ.400 கோடி வசூலான நிலையில் 2 மாதங்களில் மட்டுமே ரூ.472 கோடி நன்கொடை கிடைத்தது முதல்வர் ஸ்டாலின் மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது என்று கூறினார்.

கொரோனா இரண்டாம் அலையில் தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. அந்த நிலைமையை சமாளிக்க அதிகமாக நிதி தேவைப்பட்டதால், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி தருமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதுவரை ரூ.472 கோடி நன்கொடை திரண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் நிவாரண நிதி பயன்படுத்தப்பட்ட முழு விவரங்கள் பொது வெளியில் வெளியிடப்படும் என்று முதல்வர் உறுதியளித்ததையடுத்து, அதற்கான இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அதனை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தொடக்கி வைத்தார்.

மேலும் படிக்க:
ரேஷன் கடை:ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு வைக்க தமிழக அரசு உத்தரவு!!

நாட்டில் விரைவில் பொது சிவில் சட்டமா? தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!!

மிழ்நாட்டில் புதிய தளர்வுகள்: ஊரடங்கு ஜூலை 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)