News

Wednesday, 11 May 2022 04:06 PM , by: Dinesh Kumar

Tamil Nadu Government Announced Rs. 1000 for a School Student....

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் பெண்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதன்படி பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று ஆட்சிக்கு வந்ததும் அமல்படுத்தப்பட்டது. அதேநேரம் குடும்பத்தலைவருக்கு மாதாந்தம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் இளங்கலைப் பட்டப்படிப்பு, சான்றிதழ் அல்லது ஐடிஐ படிப்பை இடைவெளியின்றி முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை உயர்கல்வியைத் தொடர ஊக்குவிப்பதே, இதன் நோக்கமாகும்.

கல்வி துறை அமைச்சர் அறிக்கையின்படி ஏற்கனவே தமிழக பட்ஜெட்டின் போது, நிதியமைச்சர் தியாகராஜன் உரையில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றப்படுகிறது.

''மகளிருக்கு உரிமை வழங்கும் திட்டத்தை, முதல் ஆண்டிலேயே செயல்படுத்த முடியாது. பெண்கள் உரிமைக்கு தகுதியானவர்களை கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருகிறது,'' என்றார். இதனால் இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தவர்கள் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்தனர் என்று அவர் கூறினார்.

இத்திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000/- வழங்கப்படும். படிப்பு முடிவடையும் வரை மாணவர்களுக்கு இடையூறு இல்லாமல் மாதம் ரூ.1000/- வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

ஏற்கனவே மற்ற கல்வி உதவித்தொகை பெற்றிருந்தாலும் கூட, இத்திட்டத்தின் கீழ் கூடுதல் உதவிகளை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம், ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆறு லட்சம் பெண் மாணவர்கள் பயன்பெற முடியும். இந்த அரசு திட்டத்திற்காக, இந்த பட்ஜெட்டில், 698 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் திட்டமாக, இது கருதப்படுகிறது. மற்ற புலமைப்பரிசில்களுக்கு மேலதிகமாக மாணவர்கள் இதற்குத் தகுதியுடையவர்களாக இருப்பார்கள்” என்று அமைச்சர் மேலும் கூறினார்.

தற்போது நடைமுறையில் உள்ள ஈ.வி.ஆர்.மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண உதவித் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு சாதிகளுக்கு இடையேயான திருமண உதவித் திட்டம், அன்னை தெரசா அனாதை பெண்கள் திருமண உதவித் திட்டம் மற்றும் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம் ஆகியவை எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து கொண்டு வருகிறது.

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் 1989ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திருமண உதவித் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், பத்தாம் வகுப்பு முடித்த சிறுமிகளுக்கு ரூ.25,000 மற்றும் எட்டு கிராம் தங்க நாணயம் வழங்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி பயிலும் மாணவிகளின் சேர்க்கை விகிதம் மிகக் குறைவாக இருப்பதை அங்கீகரிக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பெண்களுக்கான உயர்கல்வி உறுதித் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

மேலும் படிக்க:

தமிழகப் பள்ளிகளில் இறைவணக்கத்திற்கு தடை: பொதுமக்கள் எதிர்ப்பு!

நவீன வசதிகளுடன் தனியார்ப் பள்ளிகளை மிஞ்சும் அரசுப் பள்ளி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)