News

Wednesday, 22 February 2023 07:42 PM , by: T. Vigneshwaran

Schemese For Women

ஈரோடு கிழக்கு தொகுதியில், கருங்கல்பாளையம், SKC சாலை, அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மகளிருக்கான ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை 5 மாதங்களில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதுபோலவே ஈரோடு சூரம்பட்டியில் தேமுதிக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், வேட்பாளர் ஆனந்த்தை ஆதரித்து பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுமே ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போல ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள் என்றார்.

குமலன் குட்டையில் நடைபெற்ற நாம்தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜனநாயக நாடு என்பதற்கு பதிலாக பணநாயக நாடு என மாற்றிவிடுமாறு சாடினார்.

பல்வேறு பாடல்களைப் பாடியும் சீமான் வாக்கு சேகரித்தார்.இடைத்தேர்தலுக்கு 6 நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சித் தலைவர்களும் முகாமிட்டுள்ளதால், ஈரோடு கிழக்கு தொகுதி களைகட்டியுள்ளது.

மேலும் படிக்க:

இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த அதிர்ச்சி

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)