சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 11 May, 2022 6:55 PM IST
Rs.1000 scheme for students implemented, details!

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

மருத்துவ கலந்தாய்வுக்கு பின்னர் பொறியியல் கலந்தாய்வு நடத்த உயர்கல்வித்துறை ஆலோசனை மேற்கொள்கிறது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைந்த சான்றிதழ்களை பெறுவதற்கு உயர்த்தப்பட்ட கட்டணங்கள் பழைய கட்டணத்திலேயே தொடரப்படும்.

பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொண்ட பின்னர் மருத்துவக்கல்வியில் சேர்வதற்காக மாணவர்கள் விலகுவதை குறைப்பதற்காக நீட் தேர்வு முடிந்த பிறகு பொறியியல் கலந்தாய்வு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வு குறித்து வரும் 17ம் தேதி கல்வியாளர்கள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

ஆன்லைனில் எவ்வாறு கலந்தாய்வு நடத்தினால் சரியாக இருக்கும், மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்வது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.மேலும், 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் வீட்டில் இருந்து ஆண்ட்ராய்டு போன் வாயிலாகவோ அல்லது மாணவர்கள் படித்த அந்தந்த பள்ளிகளின் வாயிலாகவோ அல்லது தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் ஸ்பெசிபிக்கேஷன் மையங்களை ஏற்படுத்தியோ மேற்கொள்வதற்காக ஆலோசித்து கொண்டு இருக்கிறோம்.

அரசு கல்லூரிகளில் எல்லா இடங்களையும் நிரப்ப வேண்டும் என்பதே அரசின் நோக்கம். எந்த கல்லூரிகளில் இடங்கள் காலியாக உள்ளதோ அங்கே படிக்க விரும்பும் மாணவர்கள் சென்று சேர்ந்து கொள்ளலாம். அதற்கான கால அவகாசம் வழங்கப்படும்.முதலமைச்சர் அறிவித்த உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ. 1000 வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும்", என்றார்.

மேலும் படிக்க

சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழ்ப்பெண்

English Summary: Rs.1000 scheme for students implemented, details!
Published on: 11 May 2022, 06:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now