News

Sunday, 07 February 2021 08:50 AM , by: KJ Staff

Credit : The Print

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த வேளாண் சட்டங்களை (Agri Laws) ரத்து செய்யக்கோரி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு விதங்களில் மத்திய அரசிடம் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இது தொடர்பாக விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய பலகட்டப் பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.

சக்கா ஜாம் போராட்டம்

பல கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் பல்வேறு படிநிலைகளைக் கடந்து வீறுநடை போட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக ‘சக்கா ஜாம் (Sakka Jam)' என்ற பெயரில் நாடு முழுவதும் நேற்று மாநில, தேசிய நெடுஞ்சாலைகளை (National Highways) முடக்கும் வகையில் முற்றுகை போராட்டத்தை முன்னெடுத்தனர். பஞ்சாப், ஹரியானா மாநிலத்தின் பெரும்பாலான சாலைகள் முடக்கப்பட்டு போக்குவரத்து ஏதுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பாதுகாப்பு பணியில் 144 UP-PAC கம்பெனிகள், 6 பாரா மிலிட்டரி கம்பெனிகள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

இணைய சேவை துண்டிப்பு

கர்நாடக மாநிலத்தின் பல்வேறு நெடுஞ்சாலைகளில் ஏராளமான விவசாயிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக பெங்களூருவிற்குள் செல்லவும், வெளியே வர முடியாமலும் வாகனங்கள் சிரமத்திற்கு ஆளாகின. விவசாயிகளுக்கு ஆதரவாக சில கன்னட அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் டெல்லியில் சாஹீதி பார்க் (Sahithi Park) பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிங்குவா எல்லைப் பகுதியில் இணைய சேவை (Network) துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மிகவும் அமைதியான முறையில் போராட்டம் நடந்தது. லால் குயிலா, ஜும்மா மசூதி, ஜன்பாத், மத்திய தலைமைச் செயலகம் உள்ளிட்ட 10 மெட்ரோ ரயில் (Metro rail) நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் கதவுகள் மூடப்பட்டிருந்தன.

பஞ்சாப் மாநிலத்தின் 15 மாவட்டங்களின் 33 இடங்களில் சாலைகள் (Roads) முடக்கப்பட்டிருந்தன. இதில் சங்ருரு, பர்னாலா, பதிண்டா ஆகிய மாவட்டங்கள் அடங்கும். நாடு முழுவதும் நண்பகல் 12 மணிக்கு தொடங்கிய போராட்டம் பிற்பகல் 3 மணிக்கு வெற்றிகரமாக நிறைவடைந்தது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

நகைகளை வைத்து விவசாயிகள் பெற்ற பயிர்க் கடனும் தள்ளுபடி! அமைச்சர் செல்லூர் ராஜூ

விவசாயிகளுக்கு இனிப்பான செய்தி! இன்று முதல் பயன்பாட்டிற்கு வரும் நெல் கொள்முதல் நிலையங்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)