News

Tuesday, 15 November 2022 07:41 AM , by: R. Balakrishnan

4% DA Hike

மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 34% அகவிலைப்படி பெற்றுவரும் நிலையில், மீண்டும் 2023 ஜனவரிக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

அகவிலைப்படி உயர்வு (DA Hike)

மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கு ஆண்டிற்கு இரண்டு முறை அதாவது ஜனவரி- ஜூன் மற்றும் ஜூலை – டிசம்பர் ஆகிய தவணைகளுக்கான அகவிலைப்படியை உயர்த்துகிறது. நாட்டின் பண வீக்க விகிதத்தினை மத்திய அரசு ஊழியர்கள் சமாளிக்கும் வகையில், AICPI குறியீட்டின் படி இந்த அகவிலைப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போதைய ஜூலை – டிசம்பர் 2022 வரையிலான தவணைக்கு முன்னதாக இருந்த 34% ல் இருந்து 4% DA உயர்த்தப்பட்டு 38% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2023 ஜனவரி – ஜூன் வரையிலான தவணைக்கு அகவிலைப்படி உயர்வு 4% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வரும் ஜனவரி மாதம் புத்தாண்டு சிறப்பு அறிவிப்பாக வெளியாகும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

இதன் மூலம் அடிப்படை சம்பளமாக ரூ.18,000 பெறும் ஊழியர்கள் 4% அகவிலைப்படி உயர்வினால் மாதம் ரூ.720 வீதமும், அதிகபட்ச ஊதியமான ரூ.56,900 பெறும் ஊழியர் மாதம் ரூ.2,276 ம் கூடுதலாக பெறுவார்கள்.

மேலும் படிக்க

சிங்கிள் பசங்களுக்கு ஏற்ற சிறந்த முதலீட்டுத் திட்டங்கள் இவை தான்!

பென்சனர்களுக்கு அரசின் சிறப்பு முகாம்: எதுக்கு தெரியுமா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)