News

Tuesday, 06 December 2022 07:59 PM , by: T. Vigneshwaran

Employment

மதுரை பெண்கள் தனிச்சிறையில் காலியாக உள்ள சமூக இயல் வல்லுநர் (Social Case Worker) பணியிடத்தை மதிப்பூதிய அடிப்படையில் நிரப்படுகின்றன. இதற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மதுரை பெண்கள் தனிச்சிறையில் சமூக இயல் வல்லுநர் (Social Case Worker) பணியிடம் ஒன்று புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடம் பொதுப் போட்டி (முன்னுரிமை அற்றவருக்கு) ஒதுக்கப்பட்டதாகும்.

சமூக இயல் வல்லுநர் (Social Case Worker) பணியிடத்திற்கு 25.10.2022 அன்றைய நிலையில் குறைந்த பட்சம் வயது தகுதி 18 ஆகவும், அதிக பட்ச வயது (OC-32, BC & MBC -34, SC&ST, SCA-37) ஆகவும் இருக்க வேண்டும். முன்னாள் இராணுவத்தினருக்கு வயது வரம்பு இல்லை.

இப்பதவிக்கு மதிப்பூதிய அடிப்படையில் மாதம் ரூ.15,000/- வழங்கப்படும் (Honoranium Basis Pay Rs. 15000/- per month). தகுதியுள்ள நபர்கள் தங்களது கல்விச்சான்று, ஜாதிச்சான்று மற்றும் மேற்படி பணியிடம் தொடர்பான பயிற்சிபெற்ற சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவர்: சிறைக்கண்காணிப்பாளர், பெண்கள் தனிச்சிறை, மதுரை - 16. என்ற முகவரிக்கு 15.12.2022-க்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

ஒருவருக்கு ரூ. 2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை

மாடுகள் அதிகம் பால் தரணுமா, இதை ட்ரை பண்ணுங்க!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)