நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 April, 2022 4:13 PM IST
Heavy Demand of Goats in Paramakudi Market..

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வாரச்சந்தைகள் நடைபெறவில்லை.

தற்போது கொரோனா வைரஸ் பரவல் முற்றிலும் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதையொட்டி கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கிக் கொள்ளப்பட்டன.

* பரமக்குடி வாரச்சந்தையில் ஆடுகள் அமோக விற்பனை.

* ஆடு ஒன்றுக்கு ரூ.500 முதல் ரூ.2,500 வரை கூடுதல் விலையில் விற்பனையானது.

* ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.

அதன்படி பரமக்குடியில் வாரச்சந்தை நடத்த தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இன்று (ஏப்ரல் 28) வியாழக்கிழமை நடைபெற்ற வாரச்சந்தையில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 7,000 ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இதில் பார்த்திபனூர், சத்திரக்குடி, முதுகுளத்தூர், பீர்க்கன்குறிச்சி ஆகியவை அடங்கும். பொதுவாக ஒரு ஆடு 8 ஆயிரம் ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகளின் விலை இன்று உயர்ந்துள்ளது. ரம்ஜான் பண்டிகை மே 3 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை கொண்டாடப்படுகிறது. எனவே முஸ்லிம் மக்கள் அசைவ உணவுகளை அதிகம் சமைக்கும் நாள் என்பதால், விலை இந்த மாற்றம். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வாரச்சந்தை என்பதால், செம்மறி ஆடுகள் நல்ல நிலையில் உள்ளன.

பரமக்குடி மார்க்கெட்டுக்கு ராமநாதபுரம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் வந்திருந்தனர். வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், வழக்கத்தை விட ஆட்டின் விலை ரூ.500 முதல் ரூ.2,500 வரை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று ஒரு ஆடு 15 ஆயிரம் ரூபாய் முதல் 26 ஆயிரம் ரூபாய் வரை இன்றைய தினம் விற்பனையாகிறது.

ஆட்டுக்குட்டிகள் பொறுத்தவரை ரூ.4,500 முதல் ரூ.6,000 வரை விற்கப்படுகிறது. மொத்தம் சுமார் 7,000 ஆடுகள் ரூ.1 கோடி ரூபாய்க்கு அளவிற்கு விற்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அசைவ உணவு பிரியர்கள், இந்த தகவலால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க..

ஆடு சந்தை திறப்பு : தீபாவளி விற்பனை படுஜோர் - ரூ.12,000க்கு விலை போன ஆடுகள்!

ஆடு வளர்த்தால் ஆண்டுக்கு ஒரு கோடி வருவாய்! அருமையான தொழில் வாய்ப்பு!

English Summary: Sale Goats, for One Crore Rupees; Surprise at Paramakudi Weekly Market!
Published on: 28 April 2022, 04:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now