மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 July, 2020 5:56 PM IST

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, நெல், கரும்பு, பருப்பு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்டவை இந்த ஆண்டு இந்தியாவில் அதிகமான பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன.

கோவிட்-19 தொற்று பரவியுள்ள நிலையிலும் விவசாயிகளின் உழவுப் பணிகளும், விவசாயத்தின் இதர பணிகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசு நடவடிக்கை (Union Government)

வட்டிமானியம், பயிர்க்கடன், கிசான் கடன் அடை, கால்நடைகள் வாங்க மானியம் என விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெருக்க முனைப்பு காட்டி வருகிறது. இதன் பயனாக காரீப் பருவத்தில் விதைகளை விதைப்பதற்கான நிலப் பரப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது.

கோடை காரீப் பருவத்தில் விதைப்புக்கான நிலப்பரப்பு

நெல் (Paddy)

நடப்பு ஆண்டில் நெல் விதைகள் 120.77 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் விதைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே பருவத்தில் மொத்தம் 95.73 ஹெக்டேர் நிலப்பரப்பில் விதைக்கப்பட்டது.

பருப்பு தானியங்கள் (Cereals)

கடந்த ஆண்டு 24.49 லட்சம் ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த பருப்பு தானியங்கள், நடப்பு ஆண்டில் 64.25 லட்சம் ஹெக்டேர் பரப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

சத்து தானியங்கள் (Coarse Cereals)

சோளம், வரகு போன்ற தானிய வகைகள் இந்தப் பருவத்தில் மொத்தம் 93.24 லட்சம் ஹெக்டேர் பரப்பில் விதைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 71.96 ஹெக்டேர் பரப்பில் விதைக்கப்பட்டன.

எண்ணெய் வித்துக்கள் (Oil seeds)

எண்ணெய் வித்துக்கள் 139.37 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான நிலத்தில் விதைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 75.27 லட்சம் ஹெக்டேரில் விதைக்கப்பட்டன.

கரும்பு(Sugarcane)

இந்த ஆண்டு, மொத்தம் 50.89 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் கரும்பு நடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு இதே பருவத்தில் 50.59 லட்சம் ஹெக்டேர் பரப்பில் நடப்பட்டன.

சணல்(Jute)

சணல் மற்றும் அதைப் போன்ற பயிர்களுக்கான விதைப்பு மொத்தம் 6.87 லட்சம் ஹெக்டேர் பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் மொத்தம் 6.82 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டன.

பருத்தி(Cotton)

பருத்தி மொத்தம் 104.82 லட்சம் ஹெக்டேர் பரப்பில் விதைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இது மிகவும் அதிகம். கடந்த ஆண்டு 77.71 லட்சம் ஹெக்டேர் பரப்பில் விதைக்கப்பட்டது.
நெல் மற்றும் தானியங்களின் விதைப்பு பரப்பு அதிகரித்திருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க ...

நிலக்கடலையில் சாகுபடியில் லாபம் அள்ளிக் குவிக்கலாம்...

வறண்ட குறுவை நாற்றங்கால் - பயிரை காக்க குடங்களில் தண்ணீர் கொண்டு ஊற்றும் விவசாயிகள்!

English Summary: Sowing area doubled during the Kharif season
Published on: 12 July 2020, 05:12 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now