அனைத்து வீடுகளிலும் சமையல் என்பது முக்கியமான ஒன்று. அத்தகைய சமையலுக்கு மிக இன்றியமையாததாக அமைவது சிலிண்டர் ஆகும். சமீபக் காலமாக சிலிண்டர் விலையில் உயர்வு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இப்பொழுது சிலிண்டர் புதிய இணைப்பு பெறுவதற்கான விலை கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது. அது குறித்த விரிவான தகவல்களை இப்பதிவு விளக்குகிறது.
மேலும் படிக்க: அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! இன்றைய விலை நிலவரம்!
வீட்டு உபயோகத்திற்கான புதிய சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கான வைப்புத் தொகையானது கூடுதலாக ரூ. 750 உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலையானது இணைப்பு ஒன்றுக்கு ரூ. 1450-ல் இருந்து ரூ. 2,200 ஆக உயர்ந்துள்ளது எனப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டு உபயோகத்திற்கான புதிய சிலிண்டர் இணைப்பின் வைப்புத் தொகைக் கட்டணம் ரூ. 750 உயர்த்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ஒவ்வொன்றின் புதிய இணைப்புக்கான வைப்புத் தொகைக் கட்டணம் ரூ.1,450-ல் இருந்து ரூ. 2,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!
மேலும், புதிய இணைப்பு விலைக்கு வாங்கும் போது இரண்டு சிலிண்டர்கள் பெறும் வாடிக்கையாளர்கள் ரூ. 4,400 வைப்புத் தொகை செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வாடிக்கையாளர்கள் தலா 14.2 கிலோ எடை கொண்ட இரண்டு சிலிண்டர்களை வாங்கும்போது கூடுதலாக ரூ. 1500 செலுத்த வேண்டும் என்பதாகும். அதே போன்று, 5 கிலோ எடை கொண்ட சிறிய சமையல் சிலிண்டருக்கான காப்புத் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் விலையானது ரூ. 800-ல் இருந்து ரூ.1,150 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் படிக்க: பெண்களுக்கு இலவசத் தையல் இயந்திரம் தரும் மத்திய அரசு! இன்றே விண்ணப்பியுங்கள்!!
அதோடு, புதிய இணைப்புக்கு வரும் பைப் மற்றும் பாஸ்புக்கிற்கு முறையே ரூ. 150 மற்றும் ரூ. 25 செலுத்த வேண்டும். மேலும், சிலிண்டர் அடுப்புக்கான ரெகுலேட்டர் விலையும் ரூ. 150-ல் இருந்து ரூ. 250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் இணைப்பு பெறும் பயனாளிகளுக்கு ஏற்கனவே இருக்கும் நடைமுறையே தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க