மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 10 May, 2023 2:32 PM IST
Gas Cylinder Subsidy

இந்தியாவில் பொதுமக்களுக்கு ஒரு ஆண்டுக்கு 8 எல்பிஜி சிலிண்டர்கள் வரைக்கும் மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தின் எரிவாயு மாற்ற குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர்களுக்கு மானியம் (Subsidy For Cylinders)

இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் பிரதமர் மோடி அவர்களால் துவங்கப்பட்டது. அதாவது, இந்த திட்டத்தின் மூலமாக இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு கிட்டத்தட்ட 50 மில்லியன் எல்பிஜி இணைப்புகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலத்திற்கு முன்பு வரை பொதுமக்களுக்கு ஆண்டுதோறும் 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. இதனிடையே எல்பிஜி சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளதால் தற்போது 8 எல்பிஜி சிலிண்டர்களுக்கு மானியம் வழங்குவது குறித்தான தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, பொது மக்களுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைப்பதால் அரசு வழங்கும் மானியத் தொகையில் 13 முதல் 15 சதவீதம் வரைக்கும் குறைய வாய்ப்புள்ளது. இந்நிலையில், ஆண்டுதோறும் இந்தியாவில் உள்ள குடும்பங்களுக்கு ஏழு முதல் எட்டு சிலிண்டர்களுக்கு மானியம் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தில் எரிசக்தி மாற்ற குழுவின் அறிக்கையில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களுக்கு சிலிண்டருக்கான மானியம் வழங்குவது குறித்தான அறிவிப்பை கூடிய விரைவில் அரசாங்கம் வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

வாட்ஸ் ஆப் பயனர்களுக்கு எச்சரிக்கை: இந்த எண்ணில் இருந்து போன் வந்தால் எடுக்க வேண்டாம்!

ரயில் நிலையங்களில் உணவுப் பொருட்களுக்கு அதிக கட்டணம்: IRCTC நடவடிக்கை!

English Summary: Subsidy scheme for 8 cylinders per year: Important announcement released!
Published on: 10 May 2023, 02:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now