News

Tuesday, 23 February 2021 08:34 AM , by: Daisy Rose Mary

Credit : Vivasayam

வேளாண் பணிகளுக்கு தேவைப்படும் நடவு இயந்திரங்கள், அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்ட வேளாண் கருவிகளை வாங்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

வேளாண் கருவிகள் வாங்க ரூ.5 லட்சம்

மதுரை மாவட்டத்தில், இந்தாண்டு வேளாண் துறையின் கீழ் 54 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் மற்றும் தோட்டக்கலை துறையின் கீழ் 27 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்குழுக்களுக்கு கூட்டுப்பண்ணை திட்டத்தின் கீழ் தலா 5 லட்சம் ரூபாய் மூலதன நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இக்குழுவில் உள்ள விவசாயிகள் ஒன்று கூடி பேசி தேவையான வேளாண் கருவிகளை வாங்கிக்கொள்ளலாம்.

அதிக கருவிகள் தேவைப்படும் இடத்தில் ஒரு குழுவினர் மற்ற குழுவினர் வாடகை முறையில் மாற்றி கொண்டும் மற்ற விவசாயிகளுக்கும் வேளாண் கருவிகளை வாடகைக்கு விடவும் ரூ.50.5 லட்சம் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.

யாரை அணுக வேண்டும்

வேளாண் கருவிகளை வாங்க விருப்பமுள்ள உழவர் உற்பத்தியாளர் குழுவினர் அந்தந்த வட்டார தோட்டக்கலை மற்றும் வேளாண் உதவி இயக்குனர்கள் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

வேளாண் சீர்திருத்தங்களுக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தீர்மானம் நிறைவேற்றம்!

90% மானியத்தில் வெள்ளாடு, செம்மறி ஆடு பெற விண்ணப்பிக்கலாம் - விவரம் உள்ளே!!

தமிழக சட்டப்பேரவையில் நாளை இடைக்கால பட்ஜெட் - ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்!!

காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம்! அடிக்கல் நாட்டி விவசாயிகளின் 100 ஆண்டு கால கனவு நிறைவேற்றினார் முதல்வர்!

அழகிய ரோஜா மலரின் அற்புத மருத்துவ குணங்கள்

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் கசப்புத் தன்மையில்லாத பழுபாகற்காய்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)