மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 April, 2022 3:14 PM IST
Raid in Tobacco and Substandard Food Items..

உணவுப் பாதுகாப்புத் துறையின் வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பொதுமக்கள் கோடை காலங்களில் அதிக அளவில் பயன்படுத்தும் குளிப்பானங்களின் தரம் குறித்தும், காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள், காலாவதியான உணவு பொருள் அதிக அளவில் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக, உணவு பாதுகாப்பு துறைக்கு பல்வேறு புகார்கள் வரப்பெற்றுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் பொதுமக்கள் சிலர் அனுப்பிய புகார் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை, உணவு பாதுகாப்பு அலுவலர் பாலமுருகன் உள்ளிட்டோர் அவிநாசி அருகே ராக்கியாபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மளிகைக்கடை மற்றும் தின்பண்டம் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு நடத்தினர். இதில் 4.5 கிலோ காலாவதியான மற்றும் தயாரிப்பு தேதி குறிப்பிடாத தின்பண்டங்கள் பறிமுதல் செய்தனர்.

அந்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி எச்சரித்தனர்!

இதேபோல் பல்லடம் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் குடோன்களில் ஆய்வு மேற்கொண்டனர். 4 கடைகளில் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்கள் 27.5 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளர்களுக்கு, தலா 5 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டு ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. காலாவதியான உணவு பொருட்கள், தின்பண்டங்கள் என 4.5 கிலோ காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

மேலும் சாலையோர கடைகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய் தரம் குறித்தும் ஆய்வு நடத்தினர். பயன்படுத்தப்பட்ட எண்ணெயை சேகரித்து வழங்குவது குறித்தும் கடைக்காரர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் படிக்க..

ஆவின் நிறுவனத்தில் 30 காலியிடங்கள் - உடனே விண்ணப்பியுங்கள்!

English Summary: Substandard food items in shops in Tirupur: Riding officers!
Published on: 11 April 2022, 03:14 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now