News

Monday, 03 April 2023 04:19 PM , by: Muthukrishnan Murugan

Sugarcane cultivators need alternatives to manage the insufficiency of labour

மாவட்டத்தில் கரும்பு அறுவடை இயந்திரம் போதுமானதாக இல்லை எனவும், அதற்கேற்ப உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு தர்மபுரி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகளிடம் கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், டிசம்பரில் அரவை பணிகள் துவங்குவது வழக்கம். தர்மபுரி மாவட்டத்தில், 1.70 லட்சம் டன் கரும்பு உற்பத்தி செய்யப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டில், 1.13 லட்சம் டன் கரும்புகள் அரவைக்காக 8.71% மீட்பு விகிதத்துடன் கொண்டு வரப்பட்டது. மொத்தம் 98,669 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரியைச் சேர்ந்த விவசாயி கே.முரளி முன்னணி ஊடகம் ஒன்றிடம் தெரிவிக்கையில், “வழக்கமாக ஒன்பதாம் மாதத்தில் கரும்பு வெட்டப்படும், ஆனால் தற்போது தருமபுரியில் பல பண்ணைகளில் ஆட்கள் இல்லாததால் வெட்டப்படாமல் கிடக்கிறது. பயிர்கள் நடவு செய்து 13 மாதங்களுக்கு மேலாகியும், ஆட்கள் பற்றாக்குறையால் சிரமப்பட்டு வருகிறோம். இப்போது கரும்புகள் சிதைந்துவிட்டன, இது போன்ற தரமற்ற கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரையும், சர்க்கரையின் மீட்பு விகிதத்தை பாதிக்கும். எனவே, தொழிலாளர் பற்றாக்குறையை நிர்வகிப்பதற்கு மாற்று வழிகள் தேவை என குறிப்பிட்டுள்ளார்.

கிடைக்கக்கூடிய மாற்று வழிகள் குறித்து பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த கே.அழகப்பன் கூறுகையில், “மாவட்டத்தில் எங்களிடம் ஒரு அறுவடை இயந்திரம் உள்ளது, அது ஒரு மணி நேரத்தில் ஒரு ஏக்கரை மூடும். ஆனால் மாவட்டம் முழுவதும் இயந்திரத்தின் தேவை அதிகமாக இருப்பதால், இயந்திரங்கள் தாமதமாக எங்களுக்கு வந்து சேரும். ஆபரேட்டரை நாம் குறை சொல்ல முடியாது. பெரிய வாகனம் நிலத்துக்குள் நுழைவதற்கு குறைந்தபட்சம் 5 மீ தூரம் தேவை, அதற்கு முன் எங்கள் நிலத்தின் வழியாக அல்லது அதன் வழியாக செல்லும் மின்கம்பங்களை அகற்ற வேண்டிய நிலையும் உள்ளது என்றார்.

மற்றொரு விவசாயி, ஆர்.செந்தமிழ் கூறுகையில், ''அறுவடை இயந்திரம் வரும் முன், ஆலையானது விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், விவசாயிகள் தயாராக இல்லாமல் இருக்கிற சமயத்தில், இயந்திரங்கள் வந்த பின்னரே அறுவடைக்கான பணிகளை மேற்கொள்வார்கள்.

ஆபரேட்டர்கள் வழக்கமாக ஒவ்வொரு வயலுக்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை மட்டுமே வைத்திருப்பார்கள், மேலும் அவர்கள் நிலத்தின் ஒரு பகுதியை வெட்டி அறுவடை செய்த பிறகு வெளியேறுகிறார்கள். எனவே மீதமுள்ள நிலத்திற்கு, தொழிலாளர் கட்டணமாக 1,750 ரூபாய் செலவழிக்க வேண்டும், மேலும் வெட்டி முடிக்க நாட்கள் ஆகலாம்” என்றார்.

ஒன்று அல்லது இரண்டு இயந்திரங்களில் அறுவடை செய்வது கடினம் எனவே அறுவடை இயந்திரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வு காணுமாறு பாலக்கோடு தர்மபுரி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் காண்க:

டெப்ரிகர் வனவிலங்கு சரணாலயத்தின் முதல் பசுமை கிராமம்- திட்டத்தின் நோக்கம் என்ன?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)