1. செய்திகள்

டெப்ரிகர் வனவிலங்கு சரணாலயத்தின் முதல் பசுமை கிராமம்- திட்டத்தின் நோக்கம் என்ன?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Debrigarh wildlife sanctuary’s first green village in Dhodrokusum village

சம்பல்பூர் பகுதியிலுள்ள டெப்ரிகர் வனவிலங்கு சரணாலயத்தின் முதல் 'பசுமை கிராமம்' ஹிராகுட் சதுப்பு நிலத்திற்கு அருகிலுள்ள தோட்ரோகுசும் கிராமத்தில் உருவாகிறது.

தோட்ரோகுசும் கிராமத்தில் மனித-விலங்கு தாக்குதல்/ வேட்டையாடுதலை குறைக்க, கிராமத்தில் உள்ள 48 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், காடுகளை சார்ந்திருப்பதைக் குறைத்து, விறகுகளை விட எரிபொருள் திறன் கொண்ட சுல்லாகளைத் தேர்ந்தெடுப்பது உட்பட சுற்றுச்சூழல் நட்பு வாழ்க்கை முறைகளுக்கு மாறி வருகின்றனர்.

இந்த முயற்சியில் அவர்களுக்கு பெருமளவில் உதவி புரிந்து வருகிறது ஹிராகுட் வனவிலங்கு பிரிவு. டெப்ரிகர் சரணாலயத்தில் வனவிலங்குகளின் அடர்த்தி அதிகமாக உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் ஹிராகுட் நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் இருப்பதால், விலங்குகள் பெரும்பாலும் கிராமத்தின் வழியாக செல்கின்றன. திறந்தவெளி மலம் கழிப்பதைத் தடுப்பதில் தொடங்கி கிராம மக்களிடையே நடத்தை மாற்றங்களைக் கொண்டுவருவதை இந்த திட்டத்தின் நோக்கமாக உள்ளது.

திறந்த வெளியில் மலம் கழிப்பதற்காக வனப்பகுதிக்குள் மக்கள் செல்வதை தடுக்கும் வகையில் 48 வீடுகளிலும் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதேபோல், வனப்பகுதியிலோ அல்லது ஹிராகுட் சதுப்பு நிலத்திலோ குப்பை கொட்டுவதை கிராம மக்கள் தடுக்கும் வகையில், அனைத்து வீடுகளுக்கும் மண்ணால் செய்யப்பட்ட மறுபயன்பாட்டு குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இரவில் விலங்குகள் கிராமத்திற்குள் நுழைவதால், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு கிராமத்தில் ஒளிரும் வகையில் சோலார் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

அதேபோல், அனைத்து வீடுகளுக்கும் எரிபொருள் சிக்கனமான சுல்லாக்கள் வழங்கப்பட்டுள்ளன. எல்பிஜி வாங்கும் திறன் உள்ளவர்களுக்கு எரிவாயு இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விறகு பயன்பாடு மற்றும் டெப்ரிகர் சரணாலயத்தில் இருந்து பெரிய அளவில் மரங்களை வெட்டி விறகுகளை சேகரிப்பது மேலும் குறையும் மற்றும் அனைத்து பெண்களுக்கும் அவற்றை பயன்படுத்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

டிஎஃப்ஓ (ஹிராகுட் வனவிலங்கு பிரிவு) அன்ஷு பிரக்யான் தாஸ் கூறுகையில், பசுமை கிராமமானது எரிபொருள் சிக்கனமான சுல்லாக்களைப் பயன்படுத்துதல் மற்றும் கழிப்பறைகளைப் பயன்படுத்துதல் போன்ற சுற்றுச்சூழல் நட்பு நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் வனவிலங்குகளின் வாழ்விடத்தின் மீதான அழுத்தத்தை குறைக்கும்.

"சாம்பார், இந்தியன் கவுர், மான் மற்றும் மயில்கள் போன்ற விலங்குகள் தோத்ரோகுசும் சுற்றுப்புறத்தில் மேய்ந்து கொண்டிருப்பதால், பிளாஸ்டிக் மற்றும் குப்பைகள் இல்லாத கிராமப் பகுதியாக மாற்ற வேண்டியது அவசியமாகிறது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்த பழக்கவழக்கங்களை அண்டை கிராமங்களில் வளர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம், ” என அவர் மேலும் கூறினார். பசுமை கிராமம் அமைக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை உத்கல் திபாஸ் தினத்தையொட்டி, வனவிலங்கு பாதுகாப்பில் முன்னுதாரணமாக இருப்போம் என கிராம மக்கள் உறுதிமொழி எடுத்தனர். நீண்ட காலத்திற்கு, ஹிராகுட் வனவிலங்கு பிரிவின் வழிகாட்டுதலின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கிராம சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் குழு கிராமத்தை பராமரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண்க:

உருளை விளைச்சலை அதிகரிக்க Lay’s கையிலெடுக்கும் புதிய முயற்சி !

English Summary: Debrigarh wildlife sanctuary’s first green village in Dhodrokusum village Published on: 03 April 2023, 03:16 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.