Summer heat in Tamil Nadu: Chief Minister Stalin's instructions to the officials!
தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக வர இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், வெப்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களை முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தமிழகத்தின் பல பகுதிகளுக்கு வெப்ப அலை எச்சரிக்கையை விடுத்துள்ள நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்து வருகின்றனர். தமிழகத்தில் வரும் சில நாட்களுக்கு வெப்ப அலைகள் நீடிக்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் ஓரல் ரீஹைட்ரேஷன் கரைசல் கிடைப்பதை உறுதி செய்யவும், வெயிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். மே 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை சுமார் 38°C முதல் 40°C வரை இருக்கும் என்று IMD கணித்துள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முதலுதவி பெட்டிகள் கிடைப்பதையும், மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் ORS இருப்பு வைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்து வருகின்றனர். உயரும் வெப்பநிலையில் நீரிழப்பைத் தடுப்பதற்குத் தேவையான பாட்டில் தண்ணீரை எடுத்துச் செல்வது மற்றும் பிற முன்னெச்சரிக்கைகள் உள்ளிட்ட தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு நீண்ட தூரப் பயணிகளுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
பேருந்து நிலையங்கள், சந்தைகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றில் குடிநீர் மற்றும் முதலுதவி பெட்டிகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கிராம பஞ்சாயத்து, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். முன்னதாகவே பணிகளைத் தொடங்கி முடிக்குமாறு தொழிலாளர்களுக்கு முதல்வர் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். கட்டுமானப் பணியிடங்கள், விவசாய நிலங்கள், சாலைகள் அமைப்பவர்கள், அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பீக் ஹவர்ஸில் வேலை செய்ய வேண்டாம் என்றும் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க
மீனவர்களுக்கு வர இருக்கும் பயோமெற்றிக் பதிவு-இனி எந்த பயமும் இல்லை!
Aavin: ஒரு நாளைக்கு 70 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய இலக்கு!