மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 July, 2020 9:21 AM IST
Credit: Scroll.in

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் பரவலாக நல்ல மழை பெய்தது. வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னையில் மழை (Rain in Chennai)

சென்னையில் ராயப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, கிண்டி, ஆலந்தூர், அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர் பல்லாவரம், தாம்பரம், குரோம்பேட்டை, ஏர்போர்ட் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதலே பரவலாக நல்ல மழை பெய்தது

வண்டலூர், பெருங்களத்தூர், புழல், திருவள்ளூர் மேடவாக்கம், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூரில் உள்ளிட்ட சென்னையின் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. அதேபோல் வேலூர், காட்பாடி, கூடலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக நல்ல மழை பெய்தது.

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு (TN expects Rain)

இந்நிலையில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வட தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணிநேரத்தில் வடகடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பாத தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

மழை பொழிவு (Rainfall in Last 24 hours)

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஏற்காடு, கோவை மாவட்டம் வால்பாறை, சின்கோனாவில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை (Warning for Fisherman)

  • மத்திய வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுவீசும்.

  • வரும் 6ம் தேதி வரை மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 50 கி.மீ முதல் 60 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.

  • வரும் 7ம் தேதி வரை அதேபோல், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.

இதனால், இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

மேலும் படிக்க... 

குறைந்த முதலீடு நிறைவான வருமானம் தரும் ''காளான் வளர்ப்பு''! 

நீரழிவு நோய்க்கான சில முக்கிய அறிகுறிகள்- கவனிக்கத் தவறாதீர்கள்!

English Summary: Tamil Nadu and Puducherry likely to get Rainfall in next 48 hours Say Chennai IMD
Published on: 04 July 2020, 09:17 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now