மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 February, 2023 5:45 PM IST

தமிழக அரசின் நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கை வருகிற மார்ச் மாதம் 20 ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

திமுக தலைமையிலான கூட்டணி சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், தமிழக நிதி அமைச்சராக பழனிவேல் தியாகராஜன் பொறுப்பேற்றார்.

ஒவ்வொரு ஆண்டு தொடக்க காலாண்டில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், நடப்பாண்டிற்கான (2023 – 24) நிதி நிலை பட்ஜெட்டை மார்ச் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்வார் என தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் அவர் குறிப்பிடுகையில், 2023- 24 ஆம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கையும், 2022-23 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவீன மானிய கோரிக்கையையும் நிதித்துறை அமைச்சர் மார்ச் 28 ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்வார் என்றார்.

சட்டமன்றத்தில் நிதிநிலை தொடர்பான அறிக்கை வாசிக்கப்பட்ட பிறகு, சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும் எனவும் அந்தக் கூட்டத்தில் சட்டமன்றத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், வேளாண் பட்ஜெட் தாக்கல் உள்பட அனைத்து அலுவல்களும் அலுவல் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்றார்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில், மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற முதல் நாளே அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. இதனை மையமாக வைத்து எதிர்கட்சிகளும் திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என கடுமையாக குற்றம்சாட்டி வந்தனர்.

சமீபத்தில் நடைப்பெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் பிரச்சாரத்தின் போதும் எதிர்க்கட்சியினர் உரிமை தொகை எப்போது வழங்குவீர்கள் என கேள்வி எழுப்பினார். இதனிடையே தான் முதல்வர் மு.க.ஸ்டாலினும் வரும் பட்ஜெட்டில் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்.

முதல்வர் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் தமிழக மக்கள் நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருக்கு குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது தவிர்த்து, சென்னையை தொடர்ந்து மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை அறிமுகப்படுத்த, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 3 கோடி செலவில் டெண்டர் கோரியுள்ளது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்.

இதனால் மெட்ரோ குறித்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறலாம் என அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றனர். திமுகவின் மற்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும் ஏதேனும் புதிய அறிவிப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க:

காற்று நம்ம பக்கம் வீசுது சார்..காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடம்

கையில் பரீட்சை அட்டையுடன் 12 ஆம் வகுப்பு தேர்வெழுத வந்த பாஜக முன்னாள் MLA

English Summary: Tamil Nadu budget will be presented on March 20 says appavu
Published on: 28 February 2023, 12:26 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now