மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 3 January, 2023 12:19 PM IST
Tamil Nadu: CM MK Stalin announces 4% DA Hike as New Year Gift

தமிழகம்: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புத்தாண்டு பரிசாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஆம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, அவர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை ( DA) 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தி அறிவித்தார்.

அகவிலைப்படி உயர்வு உடனடியாக அமலுக்கு வரும் எனவும், அவர் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார். அகவிலைப்படி உயர்வு காரணமாக, மாநிலத்திற்கு ஆண்டு அடிப்படையில் ரூ.2,359 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்று முதல்வர் கூறினார்.

"அதிகாரிகள் அதை (DA hike) புத்தாண்டு பரிசாகக் கருத வேண்டும் மற்றும் மக்கள் நலனுக்காக பாடுபட மாநில அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்"

என்று முதல்வர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று அகவிலைப்படி உயர்வு ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வரும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் என மொத்தம் 16 லட்சம் பேர் இந்த உயர்வால் பயனடைவார்கள்.

“மாநிலத்திற்கு ஆண்டு அடிப்படையில் ரூ.2,359 கோடி கூடுதல் செலவாகும். ஆனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அதற்கான செலவை அரசே ஏற்கும்,''

என்றார்.

ஒரே பணியின் அடிப்படையில் ஒரே ஊதியம் கேட்டு போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுக்கு, நிதித் துறை செயலர் (expenditure) மற்றும் பள்ளிக் கல்வித் துறை செயலர், தொடக்கக் கல்வி இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்படும். முதல்வர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் படிக்க: TNAU: பழங்கள் மற்றும் காய்கறிகளின் வணிகரீதியான உற்பத்தி குறித்து பயிற்சி

முதலைச்சருக்கு நன்றி

இந்த அறிவிப்பால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதை தொடர்ந்து, டிசம்பர் 2, 2023 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரிகளை தலைமைச் செயலகத்தில், பல்வேறு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து, சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஒய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் 4 சதவிகித அகவிலைப்படி உயர்த்தி வழங்கியமைக்காக நன்றி தெரிவித்து, புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் படிக்க:

2023 புகழ்பெற்ற கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம்| TNAU: வழங்கும் 2 நாள் பயிற்சி| IYOM 2023

Breakfast Recipe: அசத்தலான இன்ஸ்டன்ட் ராகி தோசை

English Summary: Tamil Nadu: CM MK Stalin announces 4% DA Hike as New Year Gift
Published on: 03 January 2023, 12:19 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now