நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 31 August, 2022 2:10 PM IST
Tamil Nadu employment scheme offers disabled people!

வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்குக் கல்வி, வயதுக்கான விதிகளை தளர்வு செய்து, அரசாணை வெளிவந்துள்ளது. தமிழக அரசின் நிதியின் கீழ், 2011 முதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகபட்சமாக, 55 வயது வரை என உயர்த்தியும், எட்டாம் வகுப்பு கல்வித் தகுதி கட்டாயம் இருக்க வேண்டும் என்ற விதியை நீக்கியும், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த புதிய அரசாணையை, மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கத்தினர் வரவேற்றுள்ளனர்.

காய்கறிகள் சாகுபடி செய்ய ரூ. 20,000 மானியம் அறிவிப்பு!

பழங்கள், காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 20,000 ரூபாய் மானியமாக வழங்கப்படும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசியின் குத்துக்கல்வலசை கிராமத்தில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க ஏதுவாக உழவர்சந்தை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில், தென்காசி உழவர்சந்தை நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் பங்கேற்று, அரசின் மானியத்திட்டங்கள் குறித்துப் பேசிய அவர் விவசாயிகளுக்குக் காய்கற்கள், பழங்கள் சாகுபடி செய்ய ரூ. 20 ஆயிரம் மானியமாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

விவசாயக் கடன் தள்ளுபடி அரசின் புதிய அறிவிப்பு!

விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் முதலமைச்சர் ரங்கசாமி பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முக்கியமானது, புதுச்சேரியில் விவசாயிகள் வாங்கிய ரூ.13 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு ஆகும். இதோடு,மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கப்படும், 70 முதல் 80 வயது வரையிலான முதியோர்களுக்கு உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சமையல் எண்ணெய் விலை உயர்வு

சமையலுக்குப் பயன்படுத்தக்கூடிய கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் விலை அதிகரித்துள்ளது. விருதுநகர் எண்ணெய் சந்தையில் கடந்த 2 வாரங்களாக 315 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் நல்லெண்ணெயின் விலை தற்போது 20 ரூபாய் அதிகரித்து 335 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 205 ரூபாயாக இருந்த கடலை எண்ணெய் விலை ரூ.10 அதிகரித்து 215 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மேலும் படிக்க

மீனவர்களுக்கு டீசல் மானியம்- அரசின் அதிரடி உத்தரவு!

அதிக கொள்முதல் ஆன தேங்காய்: லட்சத்தில் விற்பனை!

English Summary: Tamil Nadu employment scheme offers disabled people!
Published on: 31 August 2022, 02:10 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now