News

Tuesday, 15 June 2021 03:23 PM , by: T. Vigneshwaran

அனாதையான குழந்தைகள் அல்லது பெற்றோரில் ஒருவரை கொரோனா நோயால் இழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் உதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எம்.கே.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதே போல் கொரோனா நோயால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை தொடக்கி வைக்கிறார்.

மேலும், பட்டப்படிப்பு வரை அவர்களின் கல்விக்கான அனைத்து செலவுகளையும் மாநில அரசு ஏற்கும்.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை அடையாளம் காணவும் அவர்களுக்கு மிகவும் தேவையான உதவிகளை வழங்கவும் மாவட்ட ஆட்சியர் கீழ் ஒரு சிறப்பு பணிக்குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுட்டள்ளது.

இதுபோன்ற பெற்றோர்களை இழந்த குழந்தைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, நிவாரணம் வழங்குமாறு முதலமைச்சர் அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

சனிக்கிழமை தலைமைச் செயலகத்தில் மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் கலந்தாலோசித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை அடையாளம் காணவும் அவர்களுக்கு மிகவும் தேவையான உதவிகளை வழங்கவும் மாவட்ட ஆட்சியர் கீழ் ஒரு சிறப்பு பணிக்குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுட்டள்ளது.

இதுபோன்ற பெற்றோர்களை இழந்த குழந்தைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, நிவாரணம் வழங்குமாறு முதலமைச்சர் அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

சனிக்கிழமை தலைமைச் செயலகத்தில் மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் கலந்தாலோசித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

COVID-19 நோயால் இறந்த மற்றும் ஆதரவு இல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு தலா ரூ .5 லட்சம், பயனாளியின் பெயரில் வைப்பு வடிவில் கிடைக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வயதை எட்டியதும் குழந்தைகளுக்கு வட்டியுடன் சேர்ந்து தொகை வழங்கப்படும்.

இதேபோல், ஏற்கனவே தாய் அல்லது தந்தையை இழந்து, இப்போது அவர்களுக்கு இருந்த ஒரே பெற்றோரை கொரோனவால் இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ .5 லட்சம் டெபாசிட் செய்யப்படும்.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு வீடுகள் மற்றும் விடுதிகளில் தங்குமிடம் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.

அத்தகைய குழந்தைகளின் தங்குமிடம் உட்பட அனைத்து செலவுகளையும் அவர்களின் பட்டப்படிப்பு வரை அரசாங்கம் ஏற்கும் என்று முதல்வர் கூறினார்.

உறவினர் அல்லது பாதுகாவலரின் ஆதரவுடன் வளர்ந்து வரும் குழந்தைகள் 18 வயதை எட்டும் வரை அவர்களுக்கு ரூ .3,000 கொடுப்பனவு வழங்கப்படும்.

ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் அவர்களின் கல்வி மற்றும் நல்வாழ்வைக் கண்காணிக்க மாவட்ட அளவில் சிறப்புக் குழு அமைக்கப்படும்.

இந்த குழந்தைகள் மற்றும் அவர்களின் தந்தை அல்லது தாய்க்கு அரசாங்க நலத்திட்டங்களை விரிவுபடுத்துவதில் முன்னுரிமை வழங்கப்படும்" என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குழந்தைக்கும் மேற்கண்ட நிவாரணங்களை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை வகுக்க நிதித்துறையின் கூடுதல் தலைமை செயலாளர், சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழு அமைக்கப்படும்.

மேலும் படிக்க:

கொரோனா நிவாரண உதவி தொகையாக ரூ.2000, 14 வகையான மளிகை பொருட்களுக்குக்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)