மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 May, 2022 5:22 PM IST
Tamil Nadu: Metro water service will be suspended on May 11 in South Chennai
சென்னை மெட்ரோவாட்டர் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள பிடிசி கால்வாய் பாலம் அருகே ஒக்கியம் தொரைப்பாக்கத்தில் 500 மிமீ விட்டம் கொண்ட பைப்லைனை இணைக்கும் பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதால், சென்னையின் சில தெற்கு பகுதிகளில் மே 11 மாலை முதல் மே 12 வரை மேட்ரோவாட்டர் சேவை தடைபடலாம் என செய்திக் குறிப்பில் வெளியாகியுள்ளது.

செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், கண்ணகி நகர், எழில் நகர், ஒக்கியம் துரைப்பாக்கம், பெருங்குடி, கொட்டிவாக்கம், பாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மே 11-ஆம் தேதி மாலை 6 மணி முதல் மே 12-ஆம் தேதி காலை 6 மணி வரை குழாய் மூலம் குடிநீர் சேவை இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு பணிகள் குறித்த காலத்துக்குள் முடிக்கப்பட்டு மே 12ம் தேதி காலை 10 மணிக்குள் குடிநீர் சேவை தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில், இன்றளவும் பெரும்பாலான மக்கள் மேட்ரோவாட்டர்- குடிநீர் வசதியையே நம்பியுள்ளனர். இந்நிலையில், இந்த அறிவிப்பு அவர்களின் வாழ்வாதாரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன், தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்தும்படி அறுவுறுத்தப்படுகிறார்கள்.

இட்லி அம்மாவுக்கு வீடு பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா! யார் இவர்?

மேலும் செய்திக் குறிப்பில், நுகர்வோர் போதுமான அளவு தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவசர தேவைகள் ஏற்பட்டால், மொபைல் நீர் விநியோகத்திற்காக பகுதி பொறியாளர்கள் எண் வழங்கப்பட்டுள்ளது. பகுதி பொறியாளரின்-14 எண் (8144930914) மற்றும் பகுதி பொறியாளர்-15 எண் (8144930915) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க:

காலை உணவு திட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு, ஆசிரியர்கள் மகிழ்ச்சி!

இட்லி அம்மாவுக்கு வீடு பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா! யார் இவர்?

English Summary: Tamil Nadu: Metro water service will be suspended on May 11 in South Chennai
Published on: 09 May 2022, 05:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now