மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 July, 2020 10:42 AM IST
Image credit : SME Street

தமிழகத்தில் கொரோனா தொற்றக் காரணமாக இதுவரை 78% சதவீத சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகச் சென்னை ஐ.ஐ.டி. நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இது தற்போது வரும் ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தமிழகத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பாதிப்புகள் மற்றும் ஊரடங்கு முடிந்த பிறகு நிறுவனங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி. (Indian Institutes of Technology) நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது.

74 சதவீத வருவாய் இழப்பு (74 percent revenue loss)

இந்த ஆய்வில் கொரோனா ஊரடங்கு நாட்களில் தமிழகத்தில் சுமார் 74 சதவீத சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 80 சதவீதம் வருவாய் இழப்பைச் சந்தித்து இருப்பதாகத் தெரியவந்துள்ளது.இதில் சுமார் 31 சதவீத சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் கொடுப்பவர்களைச் சார்ந்து இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 78 சதவீத நிறுவனங்கள் தற்போது மூடப்பட்டு தான் இருப்பதாகவும். இந்த நிறுவனங்களில் 79 சதவீதம் பெருமளவில் பாதிக்கப்பட்டவையாக உள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழில் பாதிப்பு காரணங்கள் (Factors Affects Industries)

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் பொருட்களை வாங்குவோர் பாக்கித்தொகையை மிகத் தாமதமாக வழங்குவதால் தொழில்கள் முடங்குவதாக 41.38 சதவீத நிறுவனங்களும், சரக்கு போக்குவரத்து முடங்கியிருப்பதால் தொழில்கள் நலிவடைந்து இருப்பதாக 27 சதவீத நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.

வேலைக்குத் திரும்பாத ஊழியர்களின் உடல்நலக்குறைவு, சுகாதாரம் போன்ற காரணங்களும் தொழில் பாதிப்புக்கான காரணமாக இருக்கின்றன.முன்பே கொடுக்கப்பட்ட ஆர்டர்களும் ரத்து செய்துள்ளதாக 50 சதவீத நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக நிறுவனங்கள் பல பிரச்சினைகளை சந்தித்து சீர்குலைந்து இருப்பதாகவும், 38 சதவீத நிறுவனங்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஆர்டர்களை முடிக்கமுடியாமல் நெருக்கடியில் இருப்பதாக கூறுகின்றனர்.

 

Image credit : SME Khabar

நிறுவனங்களை மூடும் எண்ணம் இல்லை (No intention of shutting down)

தற்போது ஏற்பட்டுள்ள இந்த கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பாதிப்பில் மீண்டு வர சுமார் 3 மாதங்கள் ஆகும் என 14 சதவீத நிறுவனங்களும் 6 மாதங்கள் வரை ஆகும் என 12 சதவீத நிறுவனங்களும் கூறியுள்ளன. ஆனால் இது போன்ற காரணங்களால் நிறுவனங்களை மூடும் எண்ணம் இல்லை என்று 68 சதவீத நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பு - ஐ.ஐ.டி ஆய்வு!

இந்த காலகட்டத்தில் நிறுவனங்களின் வருவாய் இழப்பு 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை இருப்பதாக இதன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 74 சதவீத நிறுவனங்கள் 80 சதவீதத்துக்கு மேல் வருவாய் இழப்பைச் சந்தித்து இருப்பதாகக் கூறியிருக்கின்றனர்.

நிலையை சமாளிப்பது எப்படி (How to deal with)

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைப் போக்க நிதி மற்றும் பணப்புழக்கம் போன்றவற்றில் கொள்கை முடிவுகள் எடுக்காவிட்டால் ஊழியர்கள் வேலை இழப்பு மற்றும் நிறுவனங்கள் பெரிய அளவில் மூடப்படும் அபாயம் உள்ளது.

கடன் தவணை பெறுவது, வட்டிச்செலுத்துவது உள்ளிட்டவை சில காலத்துக்குத் தள்ளிவைக்கவேண்டும். சிறு, குறு நிறுவனங்களுக்கு ஏற்ற சிறப்பு மின்கட்டண சலுகை அளிக்கப்படவேண்டும் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டால் இந்த நிறுவனங்களை மீட்டு எடுக்க முடியும் என்று ஐ.ஐ.டி நடத்திய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சுமார் 1,200 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 13ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள்

பயிர் காப்பீடு திட்டம் : கடந்த ஆண்டில் ரூ.68.91 கோடி இழப்பீடு வழங்கி அரசு நடவடிக்கை!


English Summary: Tamil Nadu MSMEs lost 80% revenue due to Corona Virus Says IIT Madras
Published on: 09 July 2020, 10:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now