News

Wednesday, 25 May 2022 04:10 PM , by: Poonguzhali R

Tamil Nadu School update: Holidays announced every Saturday!

2022-23 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அறிவித்து இருக்கிறார். 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும் கல்வியாண்டு தொடங்கும் என்று அமைச்சர் கூறினார்.

பள்ளிக் கல்வித் துறையானது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக ஐந்து புதிய டிஜிட்டல் முயற்சிகளை அறிமுகப்படுத்தியது. இதில் ஆசிரியர்கள் தங்கள் விடுப்பு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான ஒரு செயலி உள்ளது. அவர்கள் சாதாரண அல்லது மருத்துவ விடுப்புக்கு ஒப்புதல் பெறுவதற்கு பள்ளித் தலைவர்கள் அல்லது துறை அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வ கடிதங்களைச் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. அனைத்துத் தகவல்களும் இனி டிஜிட்டல் முறையில் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளிக்கல்வித் துறையின் செயல்கள் குறித்துப் பேசிய கல்வித்துறை அமைச்சர், ஆசிரியர்களுக்கான பயிற்சி நாட்காட்டியை ஆன்லைனிலேயே வழங்குவதாகப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ள செய்தியையும் கூறியுள்ளார். அதோடு, ஆசிரியர்கள் விரும்பும் நிகழ்ச்சிகள் அல்லது படிப்புகளில் கலந்துகொள்ளவும் தேர்வு செய்யவும் முழு அதிகாரம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதனூடாக பள்ளிகள் திறப்புக் குறித்துப் பேசிய அவர், 2022-23 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை ஜூன் 13-ஆம் தேதி திறக்கப்படும் எனக் கூறியுள்ளார். கூடுதலாக, இந்த கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டிற்கான கல்வி காலண்டர் ஆன்லைனில் கிடைக்கும். தேர்வு கால அட்டவணைகள், விடுமுறை நாட்கள் மற்றும் பொது தேர்வு அட்டவணைகள் பற்றிய விவரங்களும் ஆன்லைனிலேயே கிடைக்கும் வகையில் பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது என்பது கூடுதல் தகவல் ஆகும்.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கான சான்றிதழ்கள், சமத்துவம் மற்றும் இடம்பெயர்வு சான்றிதழ்கள் உட்பட கிட்டத்தட்ட 25 வகையான சான்றிதழ்களை இ-சேவா மையங்கள் மூலம் எங்கு வேண்டுமானாலும் வாங்கலாம் என்றும் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த வசதி ஜூன் மாதம் முதல் அனைத்து இ-சேவா மையங்களிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர்களின் நிர்வாகச் சுமையைக் குறைக்கும் முயற்சியில், ஆசிரியர்கள் அணுகக்கூடிய மின்-பதிவுகளை டிஜிட்டல் முறையில் செய்யத் தொடங்கியுள்ளது. 100 பதிவேடுகளில் 30 பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இறுதியில், அனைத்து பதிவுகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு - விபரம் உள்ளே!

டெல்டா விவசாயிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)