நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 April, 2022 2:31 PM IST
Tamil Nadu: The First Seaweed Park in India!

மத்திய அரசு மீன்வளத்துறைக்கு எனத் தனி அமைச்சகத்தை உருவாக்கிப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மீனவர்களின் நலனுக்காக இக்கடற்பாசி பூங்கா திட்டமும் தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பூங்கா அமைக்க இடம் ஒதுக்கித் தருமாறு தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, கடற்பாசி வளர்ப்பிற்கான சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கான இடத்தினைத் தமிழ்நாடு அரசு தேர்வு செய்த பின்னர் பூங்கா அமைக்கும் பணி தொடங்கும் என அறிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் மீன் வளத்தை அதிகரிக்க பிரதமரின் மத்திய சம்பதா யோஜனா திட்டத்தின்கீழ்த் தரமான மீன் உறிபத்தியைக் கடலில் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சுமார் தமிழகத்தில் மீன்வளத் திட்டங்களான குளிர்பதனக் கிடங்கு, மீன் பதப்படுத்தும் ஆலை அமைத்தல், ஆழ்கடல் மீன் வளர்ப்புத் திட்டங்களுக்காக 20,000 கோடி ரூபாய் முதலீடு வழங்கப்பட உள்ளது.

மீன்பிடித் தடைக் காலத்தில் மத்திய அரசின் சார்பில் நிவாரண உதவியாக ரூ.1,500 வழங்கப்படும் என்றும், மீனவர்களுக்குக் குழு காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், நெடுஞ்சாலைகள், அனைவருக்கும் வீடு, ஜல் ஜீவன் மிஷன், மருத்துவக் காப்பீடு, முத்ரா சிறு கடன்கள் போன்ற திட்டங்களில் அதிகப் பயனாளிகளைக் கொண்ட மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது என்றும் கூறிய அவர், இதனால் தமிழகம் மேலும் வளர்ச்சி நிலையை அடைய வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்.

இதன்படிக் கடற்பாசி பூங்கா அமைக்கப்பட்டால், இந்தியாவிலேயே முதல் கடற்பாசி பூங்கா தமிழகத்தில் அமைக்கப்படும். அது அமைவதினால் அரசு பொருளாதார நிறைவை அடைய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் மீனவர்களின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களும் நிறைவேற்றப்படும் எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்பூங்கா அமைவதன் மூலம் மீனவ மகளிருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. எனவே, அவர்கள் பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கு சிறந்ததொருவாய்ப்பாக அமையும் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க

உணவுத் தொழிலில் இருந்து எஞ்சிய நீர் மூலம் கடற்பாசி சாகுபடி!

கெட்ட கொழுப்பை நீக்கும் 6 வகைப் பருப்புகள்!

English Summary: Tamil Nadu: The First Seaweed Park in India!
Published on: 19 April 2022, 12:58 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now