News

Thursday, 15 October 2020 09:35 AM , by: Elavarse Sivakumar

2024ம் ஆண்டுக்குள் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் குழாய் மூலம் தண்ணீர் வழங்குவதை உறுதி செய்யப் படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தூய்மையான, பாதுகாப்பான தண்ணீர் விநியோகம் பொது மக்களின் ஆரோக்கியத்துக்கு அவசியம் என்பதால் தொடர் பரிசோதனை இன்றியமையாததாக உள்ளது.

எனவே 2024ம் ஆண்டுக்குள் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் குழாய் இணைப்பு இருப்பதைஉறுதி செய்வதை ஜல்சக்தி அமைச்சகத்தின் (Water Resources Ministry) ஜல் ஜீவன் இயக்கம் லட்சியமாகக் கொண்டுள்ளது.

தண்ணீர் பரிசோதனைக்கான அவசியத்தை கருத்தில் கொண்டு, நவீன நடமாடும் தண்ணீர் பரிசோதனை ஆய்வகம் (Mobile Water lab)என்னும் புதுமையான முயற்சியை ஹரியானா அரசு மேற்கொண்டுள்ளது.

தண்ணீர் பரிசோதனைக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்த நவீன நடமாடும் தண்ணீர் பரிசோதனை ஆய்வகத்தில் ஜிபிஎஸ் உள்ளிட்ட சமீபத்திய தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும் நீண்டகாலத்துக்கு தொடர்ந்து போதுமான அளவிலும், பரிந்துரைக்கப்பட்ட தரத்திலும் குடி தண்ணீரை உறுதியாக வழங்குவதற்கு ஜல் ஜீவன் இயக்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

மேலும் படிக்க...

நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் கொய்யா-வீடுதோறும் வளர்க்க வேண்டிய மரம்!

பிஎஃப் சந்தாதாரர்களுக்கு அடிக்கிறது அதிஷ்டம் - தீபாவளி போனஸாக வருகிறது 8.5 % வட்டி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)