மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 January, 2021 4:24 PM IST

மாடி தோட்டத்தில் இயற்கை முறை காய்கறி உற்பத்தி செய்ய மானியம் வழங்கப்படும் என்று தோட்டக்கலை துறை தெரிவித்துள்ளது.

மோகனூர் வட்டார தோட்டக்கலைத் துறையில், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தில், இயற்கை முறையில், ஒரு குடும்பத்துக்கு தேவையான காய்கறிகள் உற்பத்தி செய்ய, தோட்டக்கலை துறை மூலம், காய்கறி பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன.

அவற்றுடன், இயற்கை உரங்கள் அஸோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியம், சூடோமோனாஸ், டிரைகோ டெர்மா விரிடி மற்றும் வேப்ப எண்ணெய் அடங்கிய தொகுப்பு, மாடிப்பகுதியில், செடிகள் வளர்க்க தேவைப்படும் கோகோ பீட் அடங்கிய பைகள், ஆறு என, மொத்தம், இரண்டு கிலோ இயற்கை உரம் மானியத்தில் வழங்கப்படுகிறது.

மானிய தொகுப்பு 

தொகுப்பின் மொத்த விலை, 850 ரூபாய். அதில், மானியம், 340 ரூபாய் போக, மீதம் 510 ரூபாய் செலுத்தினால் போதும். மேலும், மாடிவீட்டு பகுதிகளில், காய்கறிகள் தோட்டம் இயற்கை முறையில் வளர்ப்பதற்கு, சொட்டுநீர் உபகரணங்களுடன் அடங்கிய காய்கறி பெட்டகம் மானியத்தில் வழங்கப்படுகிறது. மொத்த விலை, 1,000 ரூபாய். அதில், மானியம், 400 ரூபாய் போக, 600 ரூபாய் செலுத்தினால் போதும்.

தேவைப்படும் ஆவணங்கள் 

ரேஷன் கார்டு, ஆதார் கார்டு நகல்கள் மற்றும் இரண்டு புகைப்படத்துடன் மோகனூர் வட்டார தோட்டக்கலை துறையை அணுகலாம். விபரங்களுக்கு, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சுரேஷ், 99774 21299, கார்த்திக், 99431 09006, கோபி, 86106 38415 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, தோட்டக்கலை உதவி இயக்குனர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

உணவுப்பொருட்களில் கலப்படத்தைக் கண்டறிவது எப்படி? எளிய டிப்ஸ்!

பெரம்பலூரில் அமோக விளைச்சல் -அறுவடைக்கு தயாராக உள்ள மஞ்சள் குலைகள்!

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 7-ம் கட்ட பேச்சு-தோல்வியில் முடிவடைந்தது!

 

English Summary: The Department of Horticulture said that the subsidy will be provided for oragnic farming in the terrace garden.
Published on: 05 January 2021, 04:08 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now