News

Friday, 02 July 2021 04:38 PM , by: KJ Staff

Meterbox

திமுக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து தமிழகத்தில் மின்தடை ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது.திமுக ஆட்சியில் மின்தடை பிரச்னை 10 ஆண்டுகளுக்கு முன்  அதிகமாக இருந்தது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்திருப்பதால், இனி தமிழகம் மீண்டும் இருளில் மூழ்கி விடும் என எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கடந்த முறை செய்த தவறையே இந்த முறையும் சரி செய்ய எண்ணியிருக்கும் திமுக அரசு, 10 நாட்களில் மின் பராமரிப்பு பணியை செய்து முடித்து மின்தடை பிரச்னையை போக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களிடம் இதுகுறித்து விளக்கம் கேட்ட போது, அதிமுக ஆட்சியில் 9 மாதமாக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அதை சீரமைக்கும் பணி தற்போது நடைபெறுவதனால்,10 நாட்களுக்கு மின்தடை பிரச்சனை இருக்கும். கூடிய விரைவில் சரி செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மின்கணக்கீடு செய்ய டிஜிட்டல் மீட்டருக்கு பதில் ஸ்மார்ட் மீட்டர் கொண்டுவரப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின்வாரிய துறையில் ஏற்பட்டுள்ள 900 கோடி இழப்பை சரி செய்யும் வகையில் ஸ்மார்ட் மீட்டர் கொண்டுவரப்படும் என்றும் கடந்த ஆட்சியில் 9 மாதம் செய்யாமல் இருந்த பராமரிப்பு பணி 10 நாட்களில் முடிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

3 விதமான சலுகைகளில் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தலாம்!அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

Best Electric Cycles: Nexzu Mobility புதிய ரேஞ்சுகளை சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)