மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 December, 2022 8:10 PM IST
Zika Virus

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமிக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. சிறுமியோடு சேர்த்து மேலும் மூவருக்கு காய்ச்சல் இருந்ததால், இரத்த மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் சிறுமிக்கு ஜிகா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, ராய்ச்சூர் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் சந்தேகத்திற்கிடமான தொற்று பாதிப்பு ஏதேனும் கண்டறியப்பட்டால், உடனே ஜிகா வைரஸ் பரிசோதனைக்கு மாதிரிகளை அனுப்ப, மருத்துவமனைகள் நிர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாநிலத்தில் வேறு யாருக்கும் இதுவரை புதிதாக ஜிகா வைரஸ் பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் நிலைமையை அரசு எச்சரிக்கையுடன் கண்காணித்து வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார்.

இதனால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐந்து வயது சிறுமிக்கு ஏற்பட்ட ஜிகா வைரஸ் தொற்றே, கர்நாடகாவில் முதல் பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற தொற்றுநோய்களை பரப்பும் நோய்த் தொற்றுடைய ஏடிஸ் கொசுவின் மூலம், ஜிகா வைரஸ் நோய் பரவுகிறது. இந்த வைரஸ் முதன்முதலில் 1947ல் உகாண்டாவில் கண்டறியப்பட்டது.

மேலும் படிக்க:

பால் மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடக் கூடாது

தமிழகத்தில் 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

English Summary: The next risk? Zika virus, spreading health care!
Published on: 13 December 2022, 08:10 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now