பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 7 September, 2022 12:22 PM IST
The price of cooking cylinder is low: Central Government decision!

சமையலுக்குப் பயன்படக் கூடிய கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யும் முறையினை மறு ஆய்வு செய்யப்போவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் கேஸ் சிலிண்டரின் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக வட்டாரங்கள் கூறுகின்றன. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவில் கேஸ் சிலிண்டர்களின் விலை மிக உயர்வாக இருப்பது பொதுமக்களுக்கு பெரிய அளவில் சுமையாக இருந்து வருகின்றது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கேஸ் சிலிண்டர் விலை 1000 ரூபாய்க்கு மேல் இருக்கின்றது.

இந்த நிலையில், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவுக்கு விலை நிர்ணயம் செய்யும் முறையை மறு ஆய்வு செய்வதற்கு மத்திய அரசு தனிக் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவல் குறித்து ராய்ட்டர்ஸ் (Reuters) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவுக்கு விலை நிர்ணயம் செய்யும் முறையை மாற்றலாமா என்பது பற்றி மறு ஆய்வு செய்யும்படி குழு ஒன்றை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தக் குழு தனது பரிந்துரைகளைச் செப்டம்பர் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்படுள்ளதாக ராய்ட்டர்ஸ் தகவல் வாயிலாக தெரிகிறது. எனினும், எரிவாயு விலை குறையும் வகையில் குழு பரிந்துரை செய்தாலும் கூட உடனடியாக எந்த மாற்றம் வராது. படிப்படியாக மாற்றப்படும்.

ஏனெனில், அக்டோபர் மாதம் முதல் அடுத்த எரிவாயு விலை நிர்ணயம் ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும் என முன்னரே அறிவிக்கப்பட்டது. குழுவின் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும் தேவை என்பது முக்கியம். ஆகவே, குழுவின் பரிந்துரை சாதகமாக இருந்தாலும் இது நடைமுறைக்கு வருவதற்கு சில மாதங்கள் ஆகலாம் எனக் கூறப்படுகின்றது.

மேலும் படிக்க

அதிரடியாகக் குறைந்த தக்காளியின் விலை: தமிழக அரசு!

உதடுகளின் வறட்சியைப் போக்க எளிய வழிகள்!

English Summary: The price of cooking cylinder is it low: Government decision!
Published on: 07 September 2022, 11:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now