மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 April, 2022 5:41 PM IST
The price of cumin has touched a peak!

மஞ்சள் விலை கடந்த வாரம் 7 வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட தற்போது விலை 15 சதவீதம் அதிகமாக உள்ளது. அரசாங்கத்தின் முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, 2021/22 பருவத்திற்கான உற்பத்தி 2020-21ல் 11.24 லிட்டாக இருந்து 2021-22ல் 11.76 லட்சம் டன்னாக இருந்தது.

ஜனவரி 2022 இல் மஞ்சள் ஏற்றுமதி 25% குறைந்து 10,600 டன்களாக இருந்தது. 2021 டிசம்பரில் 14275 டன்களாக இருந்தது. 2022 பிப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி 10400 ஆகவும், மார்ச் மாதத்தில் கடந்த பிப்ரவரி மாத ஏற்றுமதியை விட 17% குறைவாக இருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ஏற்றுமதி 20% குறைந்து 1.37 லட்சம் டன்களாக இருக்கிறது.

ஏப்ரல் முதல் வாரத்தில் விலையில் உச்சத்தை எட்டிய பிறகு மல்லியின் விற்பனை சரிந்துள்ளது. நிலையான ஏற்றுமதி மற்றும் குறைந்த பயிர் மதிப்பீடுகள் சந்தைகளுக்கு ஆதரவாக உள்ளன. பிப்ரவரி 2022 இல் மல்லி அல்லது தனியா ஏற்றுமதி 5.5% ஆண்டுக்கு 3320 டன்களாக இருந்தது. இது கடந்த ஆண்டு 3150 டன்னாக இருந்தது. 2021/22 நிதியாண்டில் (ஏப்ரல்-பிப்ரவரி) ஏற்றுமதி 13.7% குறைந்து 44,450 டன்னாக இருந்தது.

விலைகள்


இந்த மசாலாப் பொருட்களின் ஏற்றுமதி வரவிருக்கும் மாதங்களில் நேர்மறையாக இருக்கும் எனத் தோன்றுகிறது. மேலும் ஜீரகம் மற்றும் தனியாவின் உச்ச விநியோகக் காலம் முடிந்து வருகிறது. மஞ்சளைப் பொறுத்தவரை, தெற்கிலிருந்து வரும் வேகம் இப்போது குறையும். எனவே ஜூலை வரை மஞ்சள் வரத்து சீரான வேகத்தில் தொடரும். மொத்தத்தில், மசாலாப் பொருட்களுக்கான விலைப் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது, ஆனால் தனியா மற்றும் ஜீரகத்தின் லாபம் மஞ்சளைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் பெறும். இருப்பினும், அதிகரித்து வரும் விலைகள் வாங்குபவர்களை மேலும் விலை தள்ளுபடிக்காக காத்திருக்க தூண்டுகிறது. இருப்பினும் அனைத்து மசாலாப் பொருட்களும் விநியோக வேகம் இன்னும் அதிகமாக உள்ளது.

மஞ்சள், ஜீரகம் & மல்லி: ஓர் கண்ணோட்டம்


பெஞ்ச்மார்க் ஒப்பந்தம் மாதந்தோறும் புதிய உச்சங்களைச் செய்து வருகிறது. இந்த மாதம் விலைகள் மீண்டும் உயர்ந்தன. ஆனால் குறுகிய காலமாக விற்பனை சற்று மந்தமாக மாறியுள்ளது. எனவே அடுத்த சில வாரங்களுக்கு மேல்நோக்கிய போக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் மாதத்தின் எஞ்சிய இறுதி பகுதியில் விற்பனை வேகம் அதிகரிக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. மஞ்சளின் நிலையும் இது போன்றே காணப்படுகிறது.

ஏப்ரல் முதல் வாரத்தில் உச்சத்தை எட்டியது. ஆனால் அதன்பிறகு சில இழுபறிகள் ஏற்பட்டன. ஜீரகம் மேலும் இந்த மாத இறுதி பகுதியில் புதிய உச்சங்களை எட்டும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜீரகம் கிலோ ரூ. 300 க்கும், மல்லி (தனியா) கிலோ ரூ. 250 க்கும், மஞ்சள் கிலோ ரூ.240 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க

முட்டை சாப்பட்டால் அதிக கொலஸ்ட்ரால் வருமா?

நீங்கள் வாங்கும் சீரகம் போலியா? அடையாளம் காண்பது எப்படி?

English Summary: The price of cumin has touched a peak!
Published on: 22 April 2022, 05:41 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now