News

Saturday, 06 May 2023 03:02 PM , by: Poonguzhali R

The price of silk is Rs. 200 less per kg!

தமிழகத்தில் கோடை மழை பட்டின் தரம் மற்றும் விலையை பாதிக்கும் என பட்டு வளர்ப்பு விவசாயிகள் அஞ்சுகின்றனர். 521.25 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட தர்மபுரி மாநிலத்தில் பட்டுக்கூடு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. மேலும் ஆண்டுக்கு சுமார் 854 டன் பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

எதிர்பாராத கோடை மழையால் பட்டுக்கூடுகளின் தரம் பாதிக்கப்படும் என பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் அஞ்சுகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாகச் சந்தையில் 150 ரூபாய் வரை விலை குறைந்துள்ளதாகப் புகார் தெரிவிக்கின்றனர்.

521.25 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட தர்மபுரி மாநிலத்தில் பட்டுக்கூடு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. மேலும் ஆண்டுக்கு சுமார் 854 டன் பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுவாக, பட்டுக்கூடு உற்பத்திக்கு மிகவும் சாதகமான மாதங்கள் மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடைப்பட்டவையாகும். இந்த காலகட்டத்தில் ஈரப்பதம் குறைவாக இருப்பதோடு, பட்டுக்கூடுகளின் தரம் அதிகரிக்கிறது. இருப்பினும், கடந்த இரண்டு மாதங்களாக, சீரற்ற காலநிலை நிலவுவதால், கூடுகளின் தரம் பாதிக்கப்படும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர். மேலும், சந்தையில் பட்டுக்கூடு விலை கிலோவுக்கு ரூ.150 முதல் ரூ.200 வரை குறைந்துள்ளது.

இதுகுறித்து மதிகோன்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி எம்.ஜி.மணிவண்ணன் கூறுகையில், “கடந்த இரண்டு வாரங்களாக மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. விவசாயிகள் தங்கள் பட்டுக்கூடுகளை பாதுகாப்பாக சேமித்து வைக்க தங்களால் இயன்றதைச் செய்யும்போது, அவை ஈரப்பதத்திற்கு வெளிப்படும். அதனால் இயற்கையாகவே பட்டுக்கூடு தரம் குறைகிறது. அதனால், தரம் குறைந்தால், விலை குறையும். இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து, சந்தை மிகவும் சிக்கலாதாக அமைந்து விலை குறைந்துள்ளது. எனவே மோசமான நிலையினைச் சந்திப்பதாகக் கூறுகிறார்.

பென்னாகரத்தைச் சேர்ந்த மற்றொரு விவசாயி, ஆர்.பெருமாள் கூறுகையில், ''பிப்ரவரி மாத மத்தியில், ஒரு கிலோ கொக்கூன், 740 ரூபாய் (அதிகபட்சம் விலை) மற்றும் 527 ரூபாய் விற்கப்பட்டது. இருப்பினும், இன்று ரூ.563 (அதிகபட்ச விலை) மற்றும் ரூ.252 விற்கப்பட்டது. அதனால் விலையில் பெரிய சரிவு உள்ளது. விவசாயிகளுக்கு ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரை நஷ்டம் ஏற்படுகிறது. மேலும், காலநிலை சாதகமாக இல்லை. விலை குறையும் என அஞ்சுவதாகக் கூறுகிறார்.

மேலும் படிக்க

கோவையில் காணப்பட்ட அரிய வகை நாகப்பாம்பு!

கத்திரி வெயில் தொடங்கியது! வெயிலைத் தாங்க தயாராகுங்கள்!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)