News

Sunday, 24 April 2022 11:11 AM , by: Poonguzhali R

Thirty Days Certificate Training Course on Organic Farming!

பயிற்சியின் நோக்கங்கள்:

  • கரிம உற்பத்தியாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் தொழில்முனைவோர் என கிராமப்புற இளைஞர்களுக்கு ஆர்கானிக் சந்தையில் கிராம அளவில் வேலை வாய்ப்புகளை அதிகரித்தல்.
  • முதல் தலைமுறை கரிம வேளாண் விரிவாக்கப் பணியாளர்கள்,
  • களப்பணியாளர்கள் மற்றும் கரிம உற்பத்தியாளர்களுக்குக் கிராம அளவில் பயிற்சி அளித்தல்.
  • கிராம அளவில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான உத்திகளைக் கற்றுக்கொள்ளும் நோக்கில் பணியாளர்களை உருவாக்குதல்.

நிறுவனம்: இயற்கை வேளாண்மைக்கான தேசிய/பிராந்திய மையம் (NCOF/RCOFs).

காலம்: களப் பணியுடன் 30 நாட்கள் தங்கி இருந்து பயிற்சி வகுப்பைப் பெறுதல் வேண்டும்.

பங்கேற்பதற்கான தகுதி: GOI விதிமுறைகளின்படி இடஒதுக்கீடு கொள்கைகள்- {15% SC (04 இடங்கள்), 7.5% STகள் (02 இடங்கள்), 4.5 % உட்பட 27% OBC கள் (08 இடங்கள்)} உட்பட கிராமப்புற இளைஞர்களுக்கு இடைநிலை தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு இந்தப் படிப்பு வழங்கப்படும்.

வயது: வயது வரம்பு இல்லை.

விண்ணப்பிப்பது எப்படி?: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள  விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொண்டு, முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், தேவையான ஆவணங்களை, தேசிய அல்லது சம்பந்தப்பட்ட பிராந்திய மையங்களின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் ஐடிக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

  • 2 பாஸ்போர்ட் புகைப்படம்
  • அடையாளச் சான்றின் சுய-சான்றளிக்கப்பட்ட நகல் (வாக்காளர் ஐடி/ஓட்டுநர் உரிமம்/பான் அட்டை/ஆதார் அட்டை)
  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்
  • தகுதியான ஆவணம் மற்றும் மதிப்பெண் தாளின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்
  • ஒதுக்கப்பட்ட பிரிவுகளில் (OBC/SC/ST) சாதிச் சான்றிதழின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்
  • விண்ணப்பப் படிவம் ஆகியன ஆகும்.

மேலும் தகவலுக்கு,

ஹாபூர் சாலை, சிபிஐ அகாடமிக்கு அருகில், செக்டர் 19,
கமலா நேரு நகர், காஜியாபாத்
உத்தரப்பிரதேசம் 201002
தொலைபேசி
0120- 2764906

மின்னஞ்சல் முகவரி: nbdc@nic.in

மேலும் படிக்க

TCS 2022: TCS பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்! முன் அனுபவம் தேவையில்லை!!

ICAR 2022: மாதம் ரூ. 60000 சம்பளத்தில் வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)