மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 February, 2021 8:19 PM IST
Credit : Hindu Tamil

புதிய தொழில் தொடங்கும் ஒப்பந்தங்கள் வாயிலாக தமிழகத்தில் 75,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளிக்கும் விதமாக இந்தப் புதிய தொழில் கொள்கை மற்றும் புதிய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கை (Industry policy) விரைவில் வெளியிடப்படும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்விரண்டு தொழில் கொள்கைகளையும் நாளை காலை சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ள விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி (CM Edappadi Palanisamy) வெளியிடவுள்ளார்.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் புதிய தொழில் துவங்க 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (Memorandums of Understanding) நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகின்றன. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 75,000 பேருக்கு வேலைவாய்ப்பு (Employment) கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதுதவிர ஏற்கெனவே போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில், 20 தொழில் நிறுவனங்களின் செயல்பாட்டை நாளை முதலமைச்சர் துவக்கி வைக்கிறார்.

புதிய ஒப்பந்தங்கள் மூலம் மொத்தமாக, சுமார் 2.25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு (Employment) கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் 4 சிப்காட் (Sipcot) மற்றும் 6 டிட்கோ தொழிற் பேட்டைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டவுள்ளார். கொரோனா (Corona) பாதிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் வேலையின்மைப் (Unemployment) பிரச்சினை நிலவும் சூழலில் இந்த ஒப்பந்தங்கள் வாயிலாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.

Krishi Jagran
ரா.வ.பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

நீர்நிலைகளை சிறப்பாக பயன்படுத்தும் தமிழக விவசாயிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

வீடு தேடி பணம் வர வேண்டுமா? SBI-யின் சூப்பர் பிளான்! உடனே பதிவு செய்யுங்கள்!

English Summary: Through industry contracts Jobs for 75,000 people! Tamil Nadu government announcement!
Published on: 15 February 2021, 08:19 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now