News

Thursday, 26 May 2022 12:30 PM , by: Deiva Bindhiya

TNCMFP : Tamil Nadu CM Fellowship, Apply Today

Tamil Nadu CM Fellowship: 12 துறைகளில் திட்டங்களை செயல்படுத்துவதில், இளம் வல்லுனர்களின் திறமையைப் பயன்படுத்த 2022-2024 ஆம் ஆண்டிற்கான (Tamil Nadu CM Fellowship) முதலமைச்சர் கல்வி உதவித்தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. நிர்வாகம் மற்றும் சேவை வழங்கல் செயல்முறையை மேம்படுத்த, திறமையான இளைஞர்களின் திறனை அரசு நம்புகிறது. இந்த திட்டம், நாட்டின் பொதுக் கொள்கை மற்றும் சேவைக் களத்தில் உள்ள மதிப்புமிக்க திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தைப் பற்றிய விரிவான தகவலையும், விண்ணப்ப படிவத்தையும் பதிவில் காணலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ், ஆராய்ச்சிக்காக 12 கருப்பொருள் பகுதிகளை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது: நீர் வளங்களை பெருக்குதல், விவசாய உற்பத்தி, உற்பத்தித்திறன் மற்றும் சந்தைப்படுத்தல் இணைப்புகளை உருவாக்குதல், அனைவருக்கும் வீடு, கல்வி, சுகாதாரம், சமூக உள்ளடக்கம், உள்கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சி, திறன் மேம்பாடு, தொழில்முனைவு, வளர்ச்சி, நிறுவன கடன், பாரம்பரியம், மற்றும் கலாச்சாரம், பொருளாதார சமநிலை மற்றும் தரவு நிர்வாகம் ஆகியவை, இதில் அடங்கும். இத்திட்டம் ரூ. 5.66 கோடி செலவில் தொடங்கப்பட்ட்து, தற்போது 2022 முதல் 2024 வரை நிதியாண்டுக்கு ரூ.41.75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் பெல்லோஷிப்பின் முக்கிய அம்சங்கள்(Features of Tamil Nadu Chief Minister's Fellowship Programme)

நடத்தப்படும் வாரியம் தமிழ்நாடு மாநில அரசு
பெயர் தமிழ்நாடு முதல்வர் பெல்லோஷிப்குறிக்கோள்
குறிக்கோள் அறிவு மற்றும் செயல் சார்ந்த வளங்களின் தொகுப்பை உருவாக்க
நன்மைகள் முதல்வர் அலுவலகம் அல்லது துறையின் கீழ் பணிபுரியும் வாய்ப்பு
தகுதி வரம்பு இளங்கலை மற்றும் பிஎச்.டி. மூடித்தவர்கள்
தேர்வு முறை முதல்நிலைத் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்காணல்

முக்கிய நாட்கள் (Important Dates)

  • ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி 25 மே 2022 தொடங்கிவிட்டது.
  • ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 10 ஜூன் 2022 ஆகும்.

தமிழ்நாடு முதல்வர் பெல்லோஷிப்பின் நன்மைகள் (Benefits of Tamil Nadu CM Fellowship):

தமிழ்நாடு முதல்வர் ஃபெல்லோஷிப் மூலம் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கடளுக்கு மாதந்தோறும் ரூ. 50,000 வெகுமதியும், அவர்களின் தற்சமயம் செலவினங்களைச் சமாளிக்க அரசாங்கத்திலிருந்து ரூ. 10,000 கூடுதல் உதவித்தொகையாக வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ், தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் முதலமைச்சர் அலுவலகம் / சம்பந்தப்பட்ட துறைகளின் கீழ் வைக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பான சிக்கல்களைக் கண்காணித்து கண்டறிந்து முடிவெடுப்பார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 30 இளம் தொழில் வல்லுநர்கள், முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரிய வாயப்பு கிடைக்கும்.

மேலும் படிக்க: TNTET 2022 அறிவிப்பு: எப்போது வரும் ஹால்டிக்கேட்? அறிந்திடுங்கள்!

தகுதி வரம்பு(Eligibility Criteria):

இந்த பெல்லோஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் பின்வரும் தகுதி அளவுகோல்களைப் பின்பற்ற வேண்டும்: -

  • விண்ணப்பதாரர் 22 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் தொழில்முறை அறிவில் இளங்கலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பு பெற்றிருக்க வேண்டும், அல்லது கலை அல்லது அறிவியலில் முதுகலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பு இருத்தல் வேண்டும்.
  • விண்ணப்பதாரருக்கு தமிழ் வேலை அறிவு இருக்க வேண்டும், ஏனெனில் அது கட்டாயமாகும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணிபுரிய வேண்டியிருக்கும்.
  • விண்ணப்பதாரர் தமிழ்நாட்டில் நிரந்தர வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • BC/MBC பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 33 ஆண்டுகளாகும்.
  • SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 ஆண்டுகளாகும்.

மேலும் படிக்க:கோடை உழவு பயனுள்ளதாக இருக்குமா? தெரிந்திடுங்கள்!

கூட்டுறவு சங்கங்கள், அதிக பயிர் கடன்களை வழங்கும்

விண்ணப்பக் கட்டணம்

இந்த உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் எந்த வகையான விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை.

தமிழ்நாடு முதல்வர் பெல்லோஷிப்பிற்கான விண்ணப்ப நடைமுறை (Application Procedure for Tamil Nadu CM Fellowship)

தமிழ்நாடு முதல்வர் பெல்லோஷிப்பிற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் பின்வரும் விண்ணப்ப நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்:-

  • இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் முதலில் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும்.

18 வயதிற்குட்பட்ட நபர்கள் இருசக்கர வாகனம் ஓட்டினால் அபராதம்!

  • திட்டத்தின் முகப்புப்பக்கம் உங்கள் திரையில் திறக்கும்.
  • Click Here To Apply Now என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • விண்ணப்பப் படிவம் உங்கள் திரையில் Google டாக்ஸ் ஆவணத்தில் திறக்கப்படும்.
  • உங்களுக்கான விவரக்குறிப்புகளுடன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பத் தொடங்க வேண்டும்.
  • அங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கவனமாகப் படியுங்கள்.
  • உங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது நீங்கள் உங்கள் திரையில் தோன்றும் அனைத்து கேள்விகளுக்கும் ஒவ்வொன்றாக பதிலளிக்க வேண்டும் மற்றும் பெல்லோஷிப் திட்டத்திற்கு வெற்றிகரமாக விண்ணப்பிக்க வேண்டும்.
  • பெல்லோஷிப் திட்டம் தொடர்பான மேலதிக நடைமுறைகளுக்கு உங்களின் ஒப்புகை எண்ணை பாதுகாப்பாகவும் வைத்திருப்பதை உறுதிசெய்யவும்.

இந்த திட்டம், நிச்சயம் அனைவரும் பயன்பெரும் வகையில் இருக்கும் என நம்பப்படுகிறது.

மேலும் படிக்க:

இலங்கைக்கு நிபந்தனை விதித்த உலக வங்கி! ஏன்?

பிரதமர் மோடி வருகை முன்னிட்டு, சாலை பாதை மாற்றம் அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)