News

Sunday, 27 November 2022 11:01 AM , by: Poonguzhali R

TNEB: 100 units of free electricity! New Announcement!!

100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து மக்களுக்கு கொடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்து இருக்கிறார். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.

100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பாக வெளி வந்திருக்கும் அறிக்கையில், " தமிழ்நாட்டில்‌ உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும்‌ விவசாய மின்‌ இணைப்புதாரர்கள்‌ மின்‌ இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன்‌ இணைக்கும்‌ பணியானது ஒன்றிய அரசின்‌ உரிய ஒப்புதல்‌ பெற்று தமிழகம்‌ எங்கும்‌ கடந்த சில நாட்களாகப் பேசப்பட்டு வருகின்றது. இதற்கான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மானக்‌ கழகம்‌ முன்னரே செயல்படுத்தி வருகின்றது.

மேலும் படிக்க: பொங்கல் பரிசு ரூ.1000! ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்!!

பொதுமக்கள்‌ மின்‌ கட்டணம்‌ செலுத்தும்‌போது வரக்கூடிய‌ சிரமங்களைத் தவிர்ப்பதற்காகவும்‌, பொதுமக்களின்‌ நலனை கருத்திற்‌கொண்டும்‌, தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மான கழகமானது தமிழகத்தில்‌ உள்ள அனைத்து 2,811 பிரிவு அலுவலங்களிலும்‌ வருகின்ற 28.11.2022 திங்கட்கிழமை முதல்‌ 31-ஆம் நாள் வரை சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. பண்டிகை தினங்கள்‌ தவிர்த்து, ஞாயிற்றுகிழமை உட்பட அனைத்து நாட்களிலும்‌ காலை 10.30 மணி முதல்‌ மாலை 05.15 வரை இந்த சிறப்பு முகாம்கள்‌ செயல்படும்‌ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள்‌ இத்தகைய நிலையினைப் பயன்படுத்திக்‌ கொண்டு சிறப்பு முகாம்கள்‌ மூலம்‌ தங்களது மின்‌ இணைப்பு எண்ணிணை ஆதாருடன்‌ இணைத்துக்‌ கொள்ளுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள். வரும் டிசம்பர் 31-ஆம் நாள் வரை பொதுமக்கள்‌ அனைவரும்‌ தங்களது மின் கட்டணத்தினை எவ்வித சிரமும்‌ இன்றி எற்கனவே உள்ள நடைமுறையின்படி கொடுக்கலாம்‌. அதற்கு எந்தவித இடையூறும்‌ இல்லை. தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மானக்‌ கழகமானது எற்கனவே பொதுமக்களுக்கான சேவையை மேம்படுத்தும்‌ பொருட்டு மின்‌ நுகர்வோர்களின்‌ தொலைபேசி எண்களை மின்‌ இணைப்புடன்‌ இணைத்து இருக்கிறது.

மேலும், தற்பொழுது வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும்‌ விவசாய மின்‌ இணைப்புகளை பெற்றிருக்கும்‌ மின்‌ நுகர்வோர்கள்‌ பற்றிய விவரங்களை புதுப்பிக்கும்‌ பொருட்டு அவர்களது மின்‌ இணைப்பு எண்ணை ஆதாருடன்‌ இணைக்கும்‌ பணியை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு ஆதாரை இணைக்கும்பொழுது தற்போதுள்ள மின்‌ இணைப்பு உரிமைதாரர்கள்‌ பற்றிய விவரம்‌ கிடைக்கப்‌ பெறுவதோடு, எற்கனவே பெயர்‌ மாற்றம் செய்யப்படாமல்‌ இறந்து போன/பழைய மின்‌ இணைப்பு உரிமைதாரர்களின்‌ பெயர்களில்‌ இருக்கும்‌ மின்‌ இணைப்புகளை தற்போதுள்ள மின்‌ இணைப்பு உரிமைதாரர்களுக்கு தகுந்த ஆவணங்களின்படி பெயர்‌ மாற்றம்‌ செய்து கொள்வதற்கும்‌ இந்த திட்டம்‌ வழிவகை செய்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால்‌, தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மானக்‌ கழகத்திற்கு மின்‌ இணைப்பு உரிமையாளர்கள்‌ பற்றிய புதுப்பிக்கப்பட்ட விவரங்கள்‌ கிடைக்கப் பெறுகிறது‌. மின்‌ இணைப்பு எண்ணை ஆதாருடன்‌ இணைப்பதினால்‌ வீடுகளுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும்‌ 100 யூனிட்‌ இலவச மின்சாரத்தில்‌ எவ்வித மாற்றமும்‌ இல்லை. அதேபோல, கைத்தறி மற்றும்‌ விசைத்தறி மின்‌ நுகர்வோர்களுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும்‌ மானியமும்‌ தொடர்ந்து வழங்கப்படும்‌. குடிசை மற்றும்‌ விவசாய மின்‌ இணைப்புகளுக்கு வழங்கப்பட்டு வரும்‌ இலவச மின்சாரமும்‌ தொடர்ந்து வழங்கப்பட இருக்கிறது.


ஆதாரை இணைப்பதினால்‌ மின்‌ நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டு வரும்‌ இலவச மின்சாரம்‌ மற்றும்‌ மானியத்தில்‌ எவ்வித பாதிப்புக்களும்‌ எற்படாது" என்ற தகவலையும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

ஊட்டியாக மாறப்போகும் திருப்பூர்; மகிழ்ச்சி தகவல்!

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கல்! தமிழக மக்களுக்கு ஜாக்பாட்.?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)