News

Tuesday, 23 August 2022 03:42 PM , by: Poonguzhali R

TNPSC Group 5A Exam: Notification Released!

TNPSC குரூப் 5 ஏ தேர்வுக்கு இன்று முதல் வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை விண்னப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு விளக்குகிறது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களைத் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகின்றது. அந்த நிலையில் குரூப் 5-ஏ தேர்விற்கான அறிவிப்பாணையினைத் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர், உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 161 இடங்களை நிரப்ப குரூப் 5-ஏ தேர்வு நடைபெற உள்ளது.

குரூப் 5-ஏ இன்று முதல் வரும் செப்டம்பர் 21-ஆம் நாள் வரை விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டும் எனில் செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது. தேர்வானது திசம்பர் 18-ஆம் நாள் எழுத்துத்தேர்வு முறையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

தமிழகத்தில் 37,450 வேலைவாய்ப்புகள்: அரசு ஒப்பந்தம்!

விவசாயிகளுக்குப் பயிர் காப்பீடு அறிவிப்பு! ரூ.2000 கோடி ஒதுக்கீடு!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)