மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 July, 2022 2:46 PM IST
TNPSC: Recruitment for Surveyor-Draft

நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட பணிகளில் காலியாக உள்ள 1089 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெள்ளிக்கிழமை நேற்று வெளியானது. அதில் தேர்வு குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

நில அளவைப் பற்றிய துறையில் நில அளவர், வரைவாளர் பணியிடங்கள், ஊரமைப்புத் துறையில் அளவர், உதிவி வரைவாளர் காலிப்பணியிடங்களில் 1089 இடங்கள் காலியாக இருக்கின்றன. அதிலும், நில அளவர் பணியில் 798 இடங்கள், வரைவாளர் பணியில் 236 இடங்கள், நகர் ஊரமைப்புத் துறையில் அளவர், உதவி வரைவாளர் பணியிடங்கள் 55 இடங்கள் என இத்துறைகளில் காலிப்பணியிடங்கள் உள்ளன.

இப்பணிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பங்களை விண்ணப்பிக்க www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்தல் வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஆகஸ்டு 27-ஆம் தேதி ஆகும். அதோடு, விண்ணப்பங்களைத் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் 1 முதல் 3-ஆம் தேதி எனக் கூறப்பட்டுள்ளது.

எழுத்துத் தேர்வு நவம்பர் 6-ஆம் தேதி காலையிலும், பிற்பகலிலும் நடைபெறவுள்ளது. காலையில் என்றால் 9.30 முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் என்றால் 2 மணி முதல் 5 மணி வரையிலும் நடத்தப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு!

Whatsapp செய்தாலே ஆட்டோ வரும்: சூப்பர் வசதி!

English Summary: TNPSC: Recruitment for Surveyor-Draft: 1089 Vacancies in Tamilnadu!
Published on: 30 July 2022, 02:46 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now