மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 August, 2023 1:19 PM IST
Union Minister clarify the question of cow in list of national animal

பசுவை தேசிய விலங்காக அறிவிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்றும், நமது நாட்டின் தேசிய விலங்காக புலி தான் தொடரும் என்றும் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் மக்களவையில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) நாடாளுமன்ற உறுப்பினர் பகீரத் சவுத்ரி சில கேள்விகளை எழுப்பினர். அதில் 'கௌமாதாவினை' (பசு) தேசிய விலங்காக ஒன்றிய அரசு அறிவிக்குமா என கேள்வி எழுப்பினார்.

சௌத்ரியின் கேள்விக்கு ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி அளித்த பதில் விவரம் பின்வருமாறு:

இந்திய அரசாங்கம் புலியை 'தேசிய விலங்கு' என்றும், மயிலை 'தேசியப் பறவை' என்றும் நிறுவியது. இவை இரண்டும் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 இன் அட்டவணை-I விலங்குகளின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன. இப்பட்டியலில் பசுவினை சேர்க்கும் எண்ணம் ஒன்றிய அரசுக்கு இல்லை எனவும் தெளிவுப்படுத்தினார். கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதி, தேசிய விலங்காக புலி, தேசிய பறவையாக மயில் என ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் தட்பவெப்ப மாற்றம் துறையின் அமைச்சக ஆவணங்களிலும் மறு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் தலையிடும் எண்ணம் அரசுக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

மாநில அரசுகளின் அதிகார வரம்பு:

அலகாபாத் மற்றும் ஜெய்ப்பூர் உயர் நீதிமன்றங்கள் 'கௌமாதா'வுக்கு தேசிய விலங்கு அந்தஸ்தை வழங்க உத்தரவிட்டதா அல்லது வலியுறுத்தியதா என்ற கேள்விக்கு, இது போன்ற விஷயங்கள் மாநில சட்டமன்ற அதிகாரிகளின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்று ரெட்டி பதிலளித்துள்ளார்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து பசுக்கள் உள்ளிட்ட உள்நாட்டு கால்நடை இனங்களை பாதுகாத்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ”ராஷ்ட்ரிய கோகுல் மிஷனில் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை ஈடுபட்டுள்ளது என்றார்.

இந்த முன்முயற்சியின் விளைவாக, நாடு முழுவதும் உள்நாட்டு கால்நடை இனங்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. ஒன்றிய அரசின் சார்பில் பசு உள்ளிட்ட விலங்குகளையும், அதன் சந்ததி இனங்களையும் பாதுகாக்க ஏற்கெனவே விலங்குகள் நல வாரியம் அமைக்கப்பட்டு அவை முழு வீச்சில் திறம்பட செயல்பட்டு வருகின்றனர். பசுக்கள் மற்றும் பாரம்பரிய பசு இனங்களை பாதுகாப்பதோடு அவற்றின் எண்ணிக்கையும் உயர்த்துவதே ஒன்றிய அரசு திட்டத்தின் முக்கிய நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார். 

ஏற்கெனவே பசு வதைத் தடுப்புச் சட்டம் இந்தியாவின் சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் வருகிற ஆகஸ்ட் 11 வரை நடைப்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண்க:

சூரிய சக்தியில் மினி டிராக்டர்- கவனத்தை ஈர்த்த தினை விவசாயி

உரக்கடையில் யூரியா தட்டுப்பாடு- திருச்சி மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி

English Summary: Union Minister clarify the question of cow in list of national animal
Published on: 09 August 2023, 01:19 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now