சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 3 October, 2020 6:52 AM IST

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றத் திட்டமிட்டிருந்த நிலையில், தமிழகத்தில் நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன.

பொதுவாக குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி, உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம தேதி, காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதி ஆகிய 4 நாட்களில் கிராமசபைப் கூட்டம் கூட்டப்படுவது வழக்கம்.

கிராம சபை (Village Council )

தமிழகத்தில் 12 ஆயிரத்து 524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இவை அனைத்திலும் ஒரே நேரத்தில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும். உண்மையில் நாடாளுமன்றத் தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கொண்டவை கிராம சபைத் தீர்மானங்கள். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட தீர்மானங்களைக் கொண்ட எந்த ஒரு கிராம சபைத் தீர்மானமும், எந்த ஒரு நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும். அரசு அலுவலகங்களிலும் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

திடீர் ரத்து (Cancelled)

வழக்கப்படி இந்த முறையும் அக்டோபர் 2ம் தேதி கிராமசபைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விவசாய மசோதாக்களைக் கண்டித்து திமுக உள்ளிட்ட சில கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றத் திட்டமிட்டிருந்தன. இந்நிலையில் கொரோனா பரவலைக் காரணம் காட்டி தமிழகம் முழுவதும் கிராமசபைக் கூட்டங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால் கிராம மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

முறியடிப்பு மசோதா

இதனிடையே மத்திய அரசின் வேளாண் சட்டங்களை முறியடிக்கும் வரைவு மாதிரி மசோதாவை காங்கிரஸ் தயாரித்துள்ளது. இவை, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் சட்டசபைகளில் விரைவில் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.

மேலும் படிக்க...

FSSAI ஊழியராக விருப்பமா? நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

கரியைக் காசாக்க நீங்க ரெடியா? 2 லட்சம் வரை சம்பாதிக்க டிப்ஸ்!

English Summary: Village council meeting canceled at last!
Published on: 03 October 2020, 06:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now