News

Saturday, 11 June 2022 07:17 PM , by: T. Vigneshwaran

Cow Cart

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊர்மக்கள் ஒன்றுகூடி, மாட்டு வண்டிகளில் ஸ்ரீரங்கம் வந்து, மொட்டையடித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம் செலுத்தி, ரங்கநாதரை தரிசனம் செய்வது வழக்கம்.

குலதெய்வ வழிபாடு என்பது வழக்கமாக நடைபெறும் ஒன்று தான். பல்வேறு இடங்களில் சில வித்தியாசமான வழிபாட்டு முறைகள் நடைபெறுவதும் உண்டு. அந்த வகையில் திருச்சியில் நடைப்பெற்ற ஒரு குலதெய்வ வழிபாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திருச்சி மாவட்டம் அருகில் உள்ள காவல்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் தான் குலதெய்வம்.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊர்மக்கள் ஒன்றுகூடி, மாட்டு வண்டிகளில் ஸ்ரீரங்கம் வந்து, மொட்டையடித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம் செலுத்தி, ரங்கநாதரை தரிசனம் செய்வது வழக்கம்.

கொரானா ஊரடங்கு காரணமாக, 7 ஆண்டுகள் கழித்து நேற்று காவல்காரன்பட்டி கிராம மக்கள் மாட்டு வண்டிகளை பூட்டிக் கொண்டு, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு கிளம்பினர்.

காவல்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த, 11 கோயில் பூசாரிகள் உட்பட சுமார், 1500 பேர், 100 இரட்டை மாட்டு வண்டிகள் உட்பட, 200 வண்டிகளில் இன்று காலை ஸ்ரீரங்கம் வந்தடைந்தனர்.

மேலூர் பகுதியில் உள்ள தோப்பு ஒன்றில் சற்று ஓய்வெடுத்த பின்னர், 'வடதிருக்காவிரி' என்று அழைக்கப்படும் கொள்ளிடம் ஆற்றில் மொட்டையடித்து, பெருமாளுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பின்பு ரங்கநாதரை தரிசிக்க உள்ளனர்.

நாளை வந்தவழியே ஊர் திரும்புகின்றனர். பராம்பரியமாக மாட்டுவண்டிகளில் வந்த கிராம மக்களை, திருச்சி மாநகர மக்கள் வியப்புடன் பார்த்தது ரசித்தனர்.

மேலும் படிக்க

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி, என்ன தெரியுமா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)