News

Sunday, 14 August 2022 05:04 PM , by: Poonguzhali R

Villagers who got bus services for the first time!

தருமபுரி மாவட்டம், வத்தமலை கிராமத்திற்கு முதன் முறையாக அரசுப் பேருந்து சேவையானது தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் பேருந்தில் உற்சாகப் பயணம் மேற்கொண்டு உள்ளனர். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு விளக்குகிறது.

அனைத்து பகுதிக்கும் போக்குவரத்துச் சேவை என்பது மிக இன்றையமையாத ஒன்றாகும். இன்னும் மலை கிராமங்களில் இது கிடைக்கப்பெறாத வரமாகவே இருந்து வருகின்றது. இந்நிலையில் இன்று தருமபுர பகுதியில் இந்த வரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

முதன் முறையாகத் தொடங்கப்பட்ட இந்த பேருந்து சேவையில் தமிழக அமைச்சர்கள் சிவசங்கர், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சக்கரபாணி ஆகியோர் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் 75-வது சுதந்திர நாளைக் கொண்டாடும் நிலையில், தருமபுரி மாவட்டத்தில் மினி ஊட்டி என்று அழைக்கப்படக்கூடிய வத்தல்மலைக்கு முதன் முறையாகப் பேருந்து சேவையினை மாண்புமிகுப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சிவசங்கருடன் இணைந்து தொடங்கி வைத்துப் பயணித்தேன் என தமிழக வேளாண்துறை அமைச்சர் திரு. எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

கரும்புக்கு ஆதாரவிலை ரூ. 252 கோடி அறிவிப்பு: தமிழக அரசு

ரூ. 70 ஆயிரம் கோடியைத் தாண்டிய திருப்பூர் பின்னலாடை வர்த்தகம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)