நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 May, 2023 11:51 AM IST
Wages and incentives for Tamil Nadu weavers - Government Decision!

நெசவாளர்களின் வாழ்வாதாரத்தையும், வருவாயையும் மேம்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கைத்தறி மற்றும் நெசவாளர் துறை அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார். அதோடு, நெசவாளர்களுக்கு உறுதியான ஊதியம் மற்றும் உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகைகளை வழங்க தமிழக அரசு செயல்படுகிறது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு சங்க கைத்தறி நெசவாளர்கள் குறைந்த கூலி மற்றும் கைவினைஞர்கள் வெளியேறுவதாக புகார் கூறி வருகின்றனர். இந்த நிலையில் அவர்களை ஆதரிக்க அமைச்சர் பின்வரும் கருத்துக்களை தெரிவித்தார். கைத்தறி நெசவாளர்களுக்கான கூலியை கடந்த அரசு பல ஆண்டுகளாக உயர்த்தவில்லை. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் 10% அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளார். இந்த ஊதியங்களும் போதுமானதாக இல்லை என்பதை ஒப்புக்கொள்வதோடு, ஆனால், நிதிக் கட்டுப்பாடுகள் உள்ளன எனவும். நெசவாளர்களுக்கு உறுதியான ஊதியம் மற்றும் உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகைகளை வழங்க அரசு செயல்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளார்.

அடுத்ததாக, கோ-ஆப்டெக்ஸை புதுப்பிக்க துறை அரசு, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தை பெருகிவரும் நஷ்டத்தில் இருந்து மீட்டு லாபகரமாக மாற்றியது. 2019-20ல் 7.61 கோடி நஷ்டத்தில் இருந்து 2021-22ல் 9.4 கோடி லாபமாக உயர்ந்துள்ளது. அவை லாபகரமாக மாறியது. மேலும் அதன் விற்றுமுதல் முந்தைய நிதியாண்டை விட 2022-23ல் 30 கோடியாக அதிகரித்துள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 400 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னலாடை உற்பத்தியாளர்கள் மற்றும் நூற்பாலைகள் பருத்தி விலையை வலுப்படுத்த அரசை வலியுறுத்துகின்றன. பருத்தி மீதான 1% செஸ் வரியை தள்ளுபடி செய்துள்ளதோடு, மத்திய அரசு பருத்தி மீதான இறக்குமதி வரியை மீண்டும் மீண்டும் கோரிக்கைகள் மூலம் குறைக்க செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது அவற்றின் விலையை கணிசமாகக் குறைத்துள்ளது. இந்திய பருத்தி கழகம் தமிழ்நாட்டில் உள்ள குடோன்களை நிறுவியுள்ளது. இது ஆலைகளுக்கு மூலப்பொருட்களை மலிவாகவும் சரியான நேரத்திலும் பெற உதவுகிறது. இதனால் பருத்தி விலை கடந்த ஆண்டு உச்சத்தை எட்டியபோது ஓரளவுக்கு ஸ்திரமாக இருந்தது. CCI போன்ற அமைப்பை நிறுவ தனியார் நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருவதாகக் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

Aavin: தமிழக பால் விவசாயிகளுக்கு 2 லட்சம் ஜெர்சி பசுக்கள்!

TANTEA: ரூ.222 கோடி நஷ்டம்! ரப்பர் உற்பத்தி குறைகிறது!!

English Summary: Wages and incentives for Tamil Nadu weavers - Government Decision!
Published on: 02 May 2023, 11:51 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now