மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 February, 2021 11:03 AM IST

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோநகர் இடையிலான மெட்ரோ ரயிலில் இன்று பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.

பிரதமர் பங்கேற்பு (Prime Minister's participation)

சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம் உள்ளிட்ட முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தல், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார்.

இதன் ஒருபகுதியாக வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோநகர் இடையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

ஓசி பயணம் (Free Travel)

இதையொட்டி, இன்று மதியம் 2 மணியில் இருந்து இரவு 11 மணி வரை மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்ய நிர்வாகம் அனுமதித்துள்ளது.இதன்மூலம், விமான நிலையம்- திருவொற்றியூர் விம்கோநகர், பரங்கிமலை- சென்ட்ரல் இடையே மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் 5 மணி நேரம் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

நவீன தேஜஸ் ரயில்கள் (Modern Tejas trains)

இதனிடையே 500 நவீன தேஜஸ் வகை ரயில்களை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.

முதலாவது நவீன தேஜஸ் ரயில் டெல்லி ஆனந்த் விகார் முனையத்தில் இருந்து வருகிற நாளை இயக்கப்பட உள்ளது. ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த அகர்தலா- டெல்லி ராஜ்தானி விரைவு ரயிலுக்கு பதிலாக இந்த தேஜஸ் ரயில் இயக்கப்பட உள்ளது.

நீண்ட தூரம் செல்லும் விரைவு ரயில்களுக்கு பதிலாக, நவீன தேஜஸ் ரக ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. விரைவில் 500 தேஜஸ் ரயில்களைத் தயாரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

மேலும் படிக்க...

வெளிநாட்டுக்கு ஏற்றுமதி இல்லாததால் இறால் விலை கடும் வீழ்ச்சி!

காங்கயத்தில் நாளை கால்நடைத் திருவிழா!

பம்ப் செட்டுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும்- முதல்வர் அறிவிப்பு!

 

English Summary: Want to travel to free by Metro train? Only chance today!
Published on: 14 February 2021, 11:00 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now